நடிகை குஷ்பு-இயக்குனர் சுந்தர் சியின் மூத்த மகள் அவந்திகாவிற்கும், சென்னையைச் சேர்ந்த மெர்சன்ட் நேவி ஆபீஸர் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் இன்று காலை 9 மணியளவில் இந்து முறைப்படி மிகவும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது இந்த திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என வெறும் 25 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு இயக்குனர் சுந்தர் சியின்மூத்த மகள் அவந்திகாவும், சென்னையை சேர்ந்த மெர்சன்ட் நேவி ஆபீசர் ஷ்ரவன் சீனிவாசனும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டி திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அவந்திகா தனது திருமணத்தை (பதிவு திருமணம்) மிகவும் எளிமையாக நடத்தும் படி கோரிக்கை வைக்க,மகளின் விருப்பப்படியும், தங்களின் சந்தோஷத்திற்காகவும் திருமணத்தைக் கோவாவில் நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கூட்டம் கூட்டக் கூடாது என்று அவந்திகா கறாராகக் கூறிவிட்டதால், இரு வீட்டாரையும் சேர்த்து மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என வெறும் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் கோவாவில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் திருமணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் அவந்திகா-ஷ்ரவன் ஆகியோரது திருமணம் இந்து முறைப்படி மிகவும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது .தமிழ் திரை உலகில் இருந்து ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், திரிஷா, சுஜாதா விஜயகுமார்,நடன இயக்குனர் பிருந்தா மற்றும் நடிகர்கள் நாகார்ஜூன், வெங்கடேஷ் உள்பட திரை உலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்…..












