இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய படங்களின் கதைகள் ஒவ்வொன்றும் எப்படி வித்தியாசமானவையோ, அவர் வைக்கும் டைட்டில்களும் மனதில் “நச்” என்று ஒட்டிக்கொள்ளும்.*
மக்களிடம் படத்தை கொண்டுசேர்ப்பதற்குள் , டைட்டலை கொண்டு சேர்ப்பதில் கில்லாடி.
அவருக்கு, ஒரு படத்தின் தலைப்பு என்பது வெறும் பெயர் அல்ல—அந்தக் கதையின் முதல் உணர்வு.
அது ரசிகர்களின் மனதில் முதலில் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்க வேண்டும் என்பதில்
அதிக சிரத்தை எடுத்துக் கொள்பவர் .
“திருட்டுப் பயலே’ படத்தின் வெற்றிக்கு படத்தின் தலைப்பும் முக்கிய காரணம் என ஒரு விழாவில்
இயக்குநர் கே. பாக்யராஜ் பாராட்டு தெரிவித்தார்.
காதலை விவரிக்க பல வார்த்தைகள் இருந்தாலும், “விரும்புகிறேன்“ என்கிற பழகிய சொல்லை தலைப்பாக்கி , தீயணைக்கும் நீர் குழாய்களால் நாயகன் – நாயகியை கட்டிப்போட்டு மவுண்ட் ரோடில் அவர் வைத்த் பேனர் பேசுபொருள் ஆனது .
‘5 Star’ என்ற குழந்தைகளுக்கு பிடித்த வார்த்தையை மறக்க முடியாத நண்பர்களின் பிராண்டாக மாற்றினார்.
*’கந்தசாமி’* என்ற சாதாரண பெயரை, மக்கள் மனதில் ஒரு சூப்பர்ஹீரோவின் அடையாளமாக உயர்த்தினார். அதனுடன்
அந்தக் காலத்திலேயே , பூஜை
அன்றே , ட்ரெய்லரை கையடக்க டிஜிட்டல் திரையில் வெளியிட்டு பிரம்மிக்க வைத்தார்.
முதல் ஃபிரேம் தொடங்கும் முன்பே… டைட்டிலால் படத்தைப் பற்றி பேச வைக்கும் இயக்குநர்.
இப்போது…
*”ஒரண்ட”*
ஒரே ஒரு தலைப்பால்…
ஆர்வத்தை தூண்ட வருகிறார்.
சாதரணமாக நாம் கடந்து போகும் வட்டார வழக்குச் சொல்.
நினைவில் நிற்கும் ஒரு தலைப்பாக்கிவிட்டார்.
தலைப்பே வித்தியாசம்.
கதை ……கணிக்க முடியாதது.












