நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் ,டெல்லி, ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் தாக்குதல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. இந்த தாக்குதலுக்கு எதிராக திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்க நாதன் இது குறித்து தனது சமூக வலைதளத்தில், ”கேள்வி கேட்டால் லத்தியால் பதிலளிக்காதீர்கள்.” என கடும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார் .
நடிகை ஷாலினி பாண்டேவும் சம்பவ இடத்தில் இருந்ததாக குறிப்பிட்டு, அங்கு தான் எடுத்த மொத்தம் 10 புகைப்படங்கள் ஒன்பது வீடியோக்ககளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்து, ” நான் அங்குதான்(ஜந்தர் மந்தர்) இருந்தேன், அங்கு நான் பார்த்ததும், அங்கிருந்து நான் எடுத்துக் கொண்டு செல்வதும் என்னவென்றால், நான் சந்தித்த துணிச்சலான மனிதர்களையும், அவர்களின் முதுகெழும்புகளில் உள்ள உறுதியையும், ஆன்மாக்களில் உள்ள நம்பிக்கையையும் எப்பேர்ப்பட்ட ஒடுக்குமுறையை எதிர்கொண்டாலும் அதிலிருந்து மீண்டு வரும் துணிச்சலை எதைக் கொண்டும் நசுக்கி விட முடியாது என்று இந்த நாட்டிற்கு உணர்த்திவிட்டீர்கள். நன்றி. போராட்டக்களத்தில் நின்ற வீரர்களுக்கு என் வீர வணக்கம். ஹெய் ஹிந்த்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கச் சென்ற பாடகர் அறிவு, திடீரென நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்
அபிராமி : “ஒருவேளை அது என் குழந்தையாக இருந்தால் என்ன செய்வது?” என உருக்கமுடன் பதிவிட்டு, பல வருடங்களாகப் படித்து ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் குரலுக்கு தடியடிதான் பதிலாகக் கிடைத்துள்ளது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்
ரேவதி: மாறுபட்ட கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்துப் போராடும் மாணவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டதற்கு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதிதி ராவ் ஹைதாரி : அரசியல் காரணங்களைத் தாண்டி மனிதாபிமானமே முதன்மையானது என்று கூறி, மாணவர்கள் மீதான தாக்குதலை விமர்சித்துள்ளார்












