கதை,இயக்கம் : பிரதீப் ரங்கநாதன்,இசை :ஹிப்காப் தமிழா, ஒளிப்பதிவு :ரிச்சர்டு எம்.நாதன்
ஜெயம் ரவி ,:காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார்,யோகிபாபு,
************

“என்ன சாதி” என்று தலைமை ஆசிரியை கேட்டதும் ஆடுகளம் நரேன் “அதெல்லாம் நமக்கில்லிங்க” என்கிற பாணியில் பதில் சொன்னதும் ஜெயம் ரவியை வைத்து புரட்சி பண்ணப்போகிறார் இயக்குநர் என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே நமக்கு வருகிறது.
ஜெயம் ரவி வித்தியாசமான வேடங்களை விரும்பிச் செய்கிறவர் என்பதால் அந்த நம்பிக்கை.
மற்றொரு ஜனநாதன் என்கிற அந்த எதிர்பார்ப்பு ஜெயம் ரவியை 16 வருட கோமாவில் தள்ளியதும் மேலும் கூடுகிறது.
ஆனால் திரைக்கதை வேறு திசையில் பயணித்தும் ,சாதி மறுப்புக்கு இடமில்லாமலேயே காட்சிகள் நகன்றதும் “அட போங்கய்யா” என தளர்ந்து போகிறோம்.
ஆனால்,
அந்த தளர்வை காமடியினால் ஜெயம் ரவி,யோகிபாபு இருவரும் முற்பாதியில் நீக்கிவிடுகிறார்கள். நமது பார்வையும் மனமும் அதற்கு இசைகிறது. எல்லாமே முற்பாதியில்தான்! காமடி கலந்த கதையைத் தரவேண்டும் என்பதே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் முடிவு செய்து இறங்கி இருப்பதால் லாஜிக் பற்றி கவலைப்படவில்லை ,எல்லா இயக்குநர்களைப் போலவே!
பதினாறு வருடங்கள் என்ன நடந்தது என தெரியாமலேயே கோமாவில் ஆண்டுகளைக் கடந்தவன் எறும்பு கடித்து நினைவுக்குத் திரும்பியதும் அன்றைய உலக மாற்றத்தை வியந்து பார்ப்பது ரவிக்கே உரியது.அதற்கான காட்சிகள் யோகி பாபுவின் துணையுடன் அமர்க்களமாக நடக்கின்றன.
யோகிபாபுவின் முடியை கட்டுக்குள் வைத்திருந்தது நல்ல மாறுதல். நடிப்பும் ரசனை. எத்தகைய மோசமான நிலையில் வீட்டின் நிலைமை இருக்கிறது என்பதை வீட்டுத் தலைவனாக உணரும்போது யோகியின் மாற்றம் அருமை.
இடைவேளைக்குப் பின்னர் அந்த சின்ன சிலையின் வரலாறு, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் அராஜகம் என புதிய பாதைக்குப் போனதால் ஆடியன்சுக்கு ஏசி யின் சுகம் புரிகிறது. கிளைமாக்ஸ் சோதனை.! காஜல் அகர்வால் இருக்கிறார் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகிறார்கள்.
சினிமா முரசத்தின் மார்க்: 2 / 5












