யுவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே சத்யராஜ்,ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து அதன் நாயகன் பிரபாஸ் கூறியதாவது,
“இது அருமையான காதல் கதை. ஆக்சனும் இருக்கிறது. இந்த படத்தின் கதை 1970-ல் ஐரோப்பாவில் நடந்த ஒரு காதல் கதையைஇயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் அழகானகாதல் கதையாக்கி இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலிமற்றும் ,ஐரோப்பாவிலும் அதைத்தொடர்ந்து இந்தியாவிலும் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து நடந்தது அந்த காலகட்டத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நான் இந்த படத்தில் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் பூஜாவுக்கும் நல்ல கதாபாத்திரம் இந்தப்படத்தில் பூஜா மிக அழகாக இருக்கிறார்.
அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட் ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.சத்யராஜ் என் செல்ல கட்டப்பா, அவருடன் மிர்ச்சி படம் முதல் முறையாக பண்ணினேன் அது சூப்பர் டூப்பர் ஹிட், அதன் பிறகு பாகுபலி, இதில் சத்யராஜ் சாமியாராக வருகிறார்.அவருக்கு அருமையான கதாபாத்திரம்
பாகுபலி படத்தை தொடர்ந்து பான் இந்தியா படங்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது ராதேஷ்யாம் படமும் ஒரு பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. இதன தமிழ்ப் பதிப்புக்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்
பாகுபலி முதல் இரண்டு பாகங்களை தொடர்ந்து பாகுபலி மூன்றாவது பாகம் வருமா என கேட்கிறார்கள். மூன்றாவது பாகத்தில் நடிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் ஆனால் மூன்றாவது பாகத்தை இயக்க வேண்டியவர ராஜ மவுலி தான் அவர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் நான் அமெரிக்காவில் சொந்த வீடு வாங்கியுள்ளதாகவும் அங்கேயே செட்டில் ஆகப் போவதாகவும் வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது.
இது தான் என் நாடு, இங்கே தான் என் தொழில் இங்கேதான் என் தொழில். இங்கே தான் குடும்பம் என இருக்கும் போது,எனக்கு சம்பந்தம் இல்லாத அமெரிக்காவுக்கு எப்படிப் போவேன். அடுத்தாக என் திருமணம் குறித்து கேட்கிறார்கள்.எனக்கும் வயதாகிறது என்பது உண்மை தான் ஆனால் எனக்கு பொருத்தமான என் மனதுக்குப் பிடித்த பெண்ணை நான் இன்னும் இதுவரை சந்திக்கவே வில்லை.
எனக்கும் திருமணம் செய்ய ஆசை இருக்கிறது ஆனால் அமையனுமே..எனக்கு பிடித்த, நான் விரும்பும் பெண் என் எதிரில் வந்தால் உடனே திருமணம் தான். எத்தனையோ காதல் படங்களில் நடித்திருந்தாலும், காதலர்களுக்கு அட்வைஸ் டிப்ஸ் கொடுக்க விரும்பவில்லை காதலை உணர்ந்து அனுபவிக்க வேண்டும் .
அடுத்து சலார், ஆதி புரூஸ் ஆகிய படங்களில் நடிக்கிறேன் தமிழில் நேரடி படங்களிலும், சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்க ஆசை.. அதிலும் தமிழில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க மிகவும் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.