அத்தனை இடையூறுகளையும் துச்சமாக கடந்து கடைசியில் எல்லையைத் தொடுகிறபோது ஹர்டில்ஸ் ஓட்ட வீரன் பெறுகிற பேரின்பம் இருக்கே… விவரிக்க முடியாத ஆனந்தம்யா !அத்தகைய ஆனந்தம் சிவகார்த்திகேயனுக்கு.!
மாவீரன் டிரெய்லர் மிகப்பெரிய படத்தை எதிர்பாருங்கள் என கட்டியம் கூறுகிறது.
‘மாவீரன் ‘சாதனையாளனாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.
கதையில் சிவகார்த்திகேயன் பயந்த சுபாவம் உள்ளவர் .ஆனால் அவர் வரைந்த சித்திரக்கதை நாயகன் மாவீரன் எதிரிகளை பந்தாடுவான்.பயம் கொள்ள செய்வான்.போலி அரசியல் தலைவர்களின் முக மூடியை கிழிக்கக்கூடியவன்.
முன்னோட்டத்தில் ஒரு அரசியல்வாதியின் போஸ்டரை மிதி மிதியென மிதிக்கிறார் எஸ்.கே.! காலில் சிக்கிக்கொள்கிறது போஸ்டர்.சுற்றியுள்ள கூட்டம் முணுமுணுக்கிறது.
“எமனே தவறு செய்தாலும் தட்டிக்கேட்பான் ” என்கிறது கதையின் போக்கு.
மிரட்டலான அரசியல்வாதி மிஷ்கின் !
“நான் அரசியல்வாதிடா !இந்தக்கதையெல்லாம் எழுதுறவனே நான்தான்!” என்கிற திமிருடன் பேசுகிறார்.
“என்னைப் பார்த்தா முட்டாக் …மாதிரியா இருக்கு?”என்று அவர் சிவாவை நோக்கிக் கேட்பதும் ரசனைதான்.
படத்தை இயக்கி இருப்பவர் மடோன்னா அஸ்வின்.மண்டேலா பட இயக்குநர் .
இந்த படத்தின் இன்னொரு ஆச்சரியம் சரிதா .எத்தனையோ ஆண்டுகளை கடந்து “பூரித்த” உடம்போடு வந்திருக்கிறார்.
மற்றும் யோகிபாபு அதிதி சங்கர் ஆகியோரும் இருக்கிறார்கள்.












