பென் ஸ்டுடியோஸ் (Pen Studios), மணிகர்ணிகா ஃபிலிம்ஸ் மற்றும் பரம்ஹன்ஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில், கங்கனா ரணாவத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பாரத் பாக்ய வித்தாதா’ (Bharat Bhhagya Viddhaata) திரைப்படத்தின் பிரத்தியேக டிஜிட்டல் வெளியீட்டை ZEE5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தி ZEE5 தளத்தில் உலகளாவிய பிரீமியராக வெளியாகிறது.
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் மனோஜ் தபாடியா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘காமா மற்றும் அல்பிரெஸ்’ மருத்துவமனையில் (Cama and Albless Hospital) நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் உண்மைப் பின்னணியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்புப் படைகள் அல்லது பயங்கரவாதிகளின் மோதலை மட்டுமே காட்டாமல், மருத்துவமனைக்குள் துப்பாக்கிகள் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் முதல்நிலை அரணாக நின்று நோயாளிகளைக் காப்பாற்றிய சாதாரண மருத்துவப் பணியாளர்களின் கதையை இத்திரைப்படம் விவரிக்கிறது.
தங்களின் கடமையே பிரதானம் என நினைத்துச் செயல்பட்ட செவிலியர்கள், வார்டு உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் காவலர்களின் சொல்லப்படாத அர்ப்பணிப்பையும், தன்னலமற்ற வீரத்தையும் இப்படம் திரையில் கொண்டு வந்துள்ளது. அந்த இக்கட்டான இரவில் அசாதாரண சவால்களை எதிர்கொண்ட மருத்துவப் பணியாளர்களின் இந்த துணிச்சலான கதை, இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
இதுகுறித்து படத்தின் நாயகியும் தயாரிப்பாளருமான கங்கனா ரணாவத் விடுத்துள்ள அறிக்கையில்,
“நெருக்கடியான தருணங்களில் அசாதாரண சவால்களை எதிர்கொண்ட சாதாரண குடிமக்களின் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் துணிச்சலான கதைகளுக்கு உயிர் கொடுப்பது ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் எனக்குக் கிடைத்த பெருமை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ZEE5 இந்தி பிரிவின் வணிகத் தலைவரான காவேரி தாஸ் கூறுகையில்,
“தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்தின் மூலம் மனிதநேயத்தின் உண்மையான உன்னதத்தை உணர்த்திய இந்த மருத்துவப் பணியாளர்களின் கதையை உலகெங்கும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கிரியா ஓக், ஸ்மிதா தாம்பே, சுகிதா தாட்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், தேசபக்தி மற்றும் மனிதநேயத்தின் உன்னதத்தை உணர்த்தும் ஒரு உன்னத படைப்பாகும். தியேட்டர்களில் வெளியாகிப் பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்த எமோஷனல் சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்தை, வரும் ஆகஸ்ட் 14 முதல் இத்திரைப்படத்தை ZEE5 தளத்தில் முறைப்படி கண்டுகொள்ளலாம்.












