நடிகர், நடிகைகள்
விக்ரம் ( ஸ்கெட்ச் ), தமன்னா ( அம்மு ), சூரி ( மாரி ), ஆர்.கே.சுரேஷ் ( ரவி ), அருள்தாஸ் ( துரை ), மலையாள நடிகர் ஹரீஷ் ( சேட்டு ), ஸ்ரீமன் (பாஸ்கர் ), விஷ்வாந்த் ( குணா ), பாபுராஜா (குமார் ), வினோத் ( சிட்டி ), வேலராமமூர்த்தி( சுந்தரம் ), சாரிகா, பிரியங்கா ( பிரியா ), மதுமிதா.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை – எஸ்.எஸ்.தமன்
ஒளிப்பதிவு – சுகுமார்
பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர்
தயாரிப்பு – மூவிங் பிரேம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்சந்தர்
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச். வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஆக்சன் கலந்த மசாலா படமாக உருவாகியுள்ளது.வடசென்னைபகுதி தாதா, அதே ஏரியாவில் யாருக்கும் அஞ்சாத அடிதடி ஹீரோ, அவருக்கு 3 நண்பர்கள் , ஹீரோவைக் காதலிக்கும் ஹீரோயின், இவர்களை சுற்றி நடக்கும் கதை தான் . அப்பகுதியில் உள்ள சேட்டுவிடம் கடன்வாங்கி வண்டி வாங்கி விட்டு, ஒழுங்காகக் பணம் கட்டாமல் டிமிக்கி கொடுப்[பவர்கள் வண்டியை அவர்களுக்கே தெரியாமல் ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கும் வேலையைத் தான் ஹீரோ செய்கிறார். இவருடைய இடத்திற்கு வர ஆசைப்படுகிறார்வில்லன் ஆர்.கே.சுரேஷ்.இதனால் விக்ரமுக்கும் ஆர்.கே.சுரேஷுக்கும் இடையே கடும் பகை ஏற்படுகிறது. இந்நிலையில், விக்ரம், தமன்னாவின் தோழி ஸ்ரீ பிரியங்கா வண்டியை தூக்குகிறார்.இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் காதலாக மாறுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வரும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். அந்தக் காரை போலீஸ் மடக்குகிறது. அதில் போதை மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது .இதனால், ஆத்திரமடையும் தாதா பாபுராஜா, இதற்கு காரணமான விக்ரமையும் அவரின் நண்பர்களையும் போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார். அதைத் தொடர்ந்து விக்ரமின் நண்பர்கள் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகின்றனர் . இதையடுத்து விக்ரம் என்ன செய்கிறார். இந்த கொலைகளுக்கு காரணம் யார்? விக்ரமையும் பாபு ராஜா கொலை செய்தாரா? ஆர்.கே.சுரேஷுடனான மோதல் என்ன ஆனது? தமன்னாவுடன் விக்ரம் திருமணம் நடந்ததா ? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. ஸ்கெட்ச் விக்ரமின் அசத்தல் நடிப்பு ,மற்றும் சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தாலும், அதையும் மீறி அவர் முகத்தில் தெரியும் சோர்வு நமக்கு சின்னதாக அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. விக்ரமிற்கு இப்படம் இன்னொரு ராஜாபாட்டை என்றே கூறலாம்.விக்ரம் இனிமேலாவது தனக்கு உரிய கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தினால் நல்லது.நாயகி தமன்னா, அழகாக வந்து போகிறார். இடைவேளைக்கு பின் விறுவிறுப்பான கதையில் ஆங்காங்கே இடம் பெறும் பாடல் காட்சிகள், படத்திற்கு பெரிய ஸ்பீட் பிரேக். இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.சூரி வீணடிக்கபட்டிருக்கிறார். பெரிய படநிறுவனம் கொடுத்த நல்ல வாய்ப்பை இயக்குனர் நழுவ விட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.சுகுமாரின் ஒளிப்பதிவு அருமை . தமன் இசையில் பாடல்கள் ஒரு தடவை கேட்கலாம் ரகம். மொத்தத்தில் இயக்குனருக்கு ஸ்கெட்ச் போட தயாரிப்பாளர் பலமான களம் அமைத்து கொடுத்தும் இயக்குனர் கோட்டை விட்டுள்ளார் .