அசோசியேட் முரளி என்றுதான் அவரை அழைப்பார்கள். திரை உலகில் 35 ஆண்டுகள். உடல் தேய உழைத்தவர். அசோசியேட் இயக்குநராக பல படங்களிலும் இயக்குநராக சில படங்களிலும் பணியாற்றியவர். வாழ்வின் உயரம் பார்த்தார்.பள்ளமும் பார்த்தார். இரவும் உறக்கம் இல்லை.பகலும் அவருக்கு இரவாக இருக்கவில்லை.
ஆனாலும் என்ன?
சினிமா உலகம் மறந்தது.வேலை இல்லை.வயிறும் பசியும் உடன்பிறந்த நோயல்லவா?
கடந்த மூன்று மாதங்களாக செக்யூரிட்டி ! அதுவும் நிலைக்கவில்லை.வேலையற்றவனுக்கு தேசிய வேலை கட்டிடகூலிதானே! கல் சுமந்தார் .காங்கிரீட் கலவை சுமந்தார்!
கடைசியில் மாரடைப்பு அவருக்கு இறுதி வாய்ப்பு அளித்து விடை கொடுத்தது.
மலையாளத் திரை உலகம் அந்த உழைப்பாளிக்கு ஒரு மாலை கூட அணிவிக்கவில்லை!