நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கையின் சில பக்கங்களை சுருக்கமாக ஆனால் உருக்கமாக பதிவு செய்திருக்கிற படம்தான் ‘நடிகையர் திலகம்.’ மகிழ்ச்சி,இகழ்ச்சி ,புகழ்ச்சி, உயர்வு, தாழ்வு என அத்தனையும் அதிக அளவில் கலந்து வாழ்ந்து மறைந்த மகா நடிகை. சற்று உருவத்திலும் மெகா சைஸ்!
ஆக அவரது கதாபாத்திரமாக நடித்திருக்கிற கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகத்தின் உருவத்தையும் உணர்வுகளையும் உள்வாங்கி எப்படி பிரதிபலித்திருக்கிறார்?
அவரிடமே கேட்டால் போச்சு!
கேப்போம்ல!
“சாவித்ரியம்மா ப்யூர் தெலுங்கு பேசுறவங்க. அதை பேசுறதுதான் பிரச்னையா தெரிஞ்சாலும் சமாளிச்சிட்டேன்.அவங்க ஒல்லியா,பிறகு கொஞ்சம் தாட்டியா,பிறகு மெலிஞ்சு இருந்தாங்க. அதை கொண்டு வர்றதுக்குத்தான் ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு. அதுக்காக பிராஸ்தடிக் மேக்கப் அஞ்சாறு தடவை ட்ரை பண்ணினோம். கேமராமேன் சார் தான் ரொம்பவும் உதவியாக இருந்தார்.”
“படத்தில் வேற கேரக்டர்ஸ் யார் யார் இருக்காங்க?”
“ஜெமினி, நாகேஷ், என்.டி.ஆர் . இப்படி சின்ன சின்ன சீன்களில் இருக்காங்க.”
“உங்களுக்கு 120 காஸ்ட்யூம் தேவைப்பட்டதாமே?”
“சாவித்ரியம்மாவின் வாழ்க்கையை பல கட்டமாக காட்ட வேண்டியதாக இருந்ததால் அவ்வளவு காஸ்ட்யூம் வேண்டியதாக இருந்தது.”
“சமந்தாவுக்கு என்ன கேரக்டர்?”
“அவங்களுக்கு ஒரு சீன் இருக்கு!”
“உங்களுக்கு ஆந்திராவில் அதிக சம்பளமாமே?”
“அப்படியா சொல்றாங்க!”
“அவங்க நிறைய கொடுப்பதினால்தான் ஆந்திராவுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறார்னு சொல்றாங்களே?”
“சொல்றவங்களுக்கு என்ன எத வேணும்னாலும் சொல்லிடுவாங்க?”
“சினிமாவில் நடிக்கும்போதுதான் சாவித்திரிக்கு ஜெமினி கணேசன் மேல் காதல் வந்தது.அத மாதிரி உங்களுக்கு காதல் பிறந்திருக்கா?”
.”……………………………..சிரிப்பு!!”
“சாவித்திரி பயோபிக்கில் நடிச்சாச்சு.அடுத்து யாருடைய வரலாற்று படம்?”
“இதுதான் முதலும் முடிவும்! படங்களில் பார்த்திருக்க முடியாத வாழ்க்கையின் பகுதிகளை கற்பனையாக சொல்கிறபோது தனி சுவைதான்! வீட்டில் எப்படி இருந்தாங்க, கணவனுடன் எப்படி பழகினாங்க, வீட்டு வேலைகளை எப்படி எடுத்துக்கிட்டாங்க ,குழந்தை வளர்ப்பு இப்படியெல்லாம் நிறைய சீன்கள் இருக்கு,!எனக்கு ஸ்விம் பிடிக்கும். சாவித்ரியம்மாவுக்கும் பிடிக்கும்.எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்.அவங்களுக்கும் பிடிக்கும்.அவங்க நகம் கடிப்பாங்க.எனக்கும் அந்த பழக்கம் இருக்கு, இப்படி பல ஒற்றுமைகள் இருக்கு.!”
“எந்த ஹீரோவுடன் நடிக்க பிடிக்கும்?”
“எந்தெந்த ஹீரோக்களுடன் நடிக்கிறேனோ அவங்களை எல்லாம் பிடிக்கும்!”
“இந்த படத்துக்கு தேசிய விருது?”
“கொடுத்தால் சந்தோசம்!”
“பாலியல் வன்முறை பற்றி?”
“பாரமாக இருக்கிறது.தினமும் பேப்பரில் படிக்கிறபோது கஷ்டமாக இருக்கிறது. என்ன தண்டனை கொடுக்கலாம்? எல்லோரும் என்ன தண்டனை கொடுக்கச் சொல்கிறார்களோ அதையே கொடுத்து விடலாம்.” என்று முடித்துக் கொள்கிறார் பேட்டியை!