காவேரி மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்ட மூன்றாவது நாளான இன்று காலையில் முதல்வர் எடப்பாடி ராமசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூவரும் மருத்துவமனைக்கு வந்தனர், கலைஞரைப் பார்த்தனர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கனிமொழி எம்.பி. இருவரையும் சந்தித்து கால் மணி நேரம் பேசினர்.
” மதிப்பும் மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சரும் மூத்தவருமான கலைஞரை சந்தித்தோம்.உடல்நலம் சீராக இருக்கிறது” என்கிற தகவலை செய்தியாளர்களிடம் சொல்லி விட்டு புறப்பட்டு சென்றார்கள்.
இன்று காலை மருத்துவமனைக்கு மு.க.அழகிரியும் வந்திருந்தார்.
நேற்று இரவு கலைஞரின் உடல் நலத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து திமுகவினரின் மத்தியில் பலத்த அதிர்ச்சி காணப் பட்டது .ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்கள் உணர்ச்சிப் பெருக்கில் பாரிகேடை தகர்த்து விட்டு முன்னேறிப் போனார்கள். அவர்களை தடுக்க போலீசார் லேசாக தடியடி பிரயோகம் செய்ய நேர்ந்தது.
மழை பெய்த போதிலும் கலைந்து செல்லவில்லை.
உடல்நலம் சீரடைந்தது என்று ஆ.ராஜா அறிவித்த பின்னர்தான் சற்று அமைதி நிலவியது. மருத்துவமனை முன்பாக இன்று காலை ஒரு தொண்டர் மொட்டை போட்டுக்கொண்டார். தலைவரின் மருத்துவமனை செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த கோவை மாவட்டம் குல்லாக்காப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த திமுக தொண்டர் ரா.அம்சத்குமார் என்பவர் மாரடைப்பினால் உயிர் நீத்த சம்பவமும் நடந்திருக்கிறது. இவர் திமுகவின் தீவிர பற்றுடையவர் போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்