
தமிழகத்தில் வரும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள தாக இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று மாலை டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.அவர்களில் 4 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இதில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களுக்காக .அதிகபட்சமாக 1,200 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்றும் . வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி அன்று நடைபெறும்.மேலும் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். என்றும் அறிவித்தார்
இந்நிலையில் தமிழ்கத்தில் .வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9 ஆம் தேதி கடைசி நாளாகும்.
. தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக் காலம் மே 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 117.












