எஸ்.டி.ஆர். என ரசிகர்களால் பிரியமுடன் அழைக்கப் படுகிற சிலம்பரசன் என்கிற சிம்புவுக்கு வேஷம் போடத்தெரியாது. வெளிப்படையாகவே பேசி விடுவார். அவர் ஒரு பேட்டியில் சொன்னவைதான் இவை.
“எனக்கு விஜய் அண்ணாவை பெர்சனலாகத் தெரியும். அவரைப் பிடிக்கும்.சினிமாவில் அஜித் சாரை பிடிக்கும்.நான் எப்பவுமே வெளிப்படையாக இருப்பவன், பேசுகிறவன், இந்த விசயத்தில் விஜய் அண்ணா தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார். அவருக்கு நான் உண்மையாகத்தான் இருக்கிறேன். இது அவருக்கும் தெரியும்.
அவர் நன்றாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.சமுதாயத்தின் மீது அக்கறை இருக்கிறது. அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பும் இருக்கு.நான் என்றுமே அவர்க்கு தம்பிதான்! அவர் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். நிகழ்ச்சிகளில் கூட நான்தான் போய் பேசுவேன்.” என்று சொல்லி இருக்கிறார் சிம்பு.