Saturday, June 14, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“எங்கிட்ட மோதாதே”-யாரை குறிப்பிட்டார் விஷால்.! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு.!

admin by admin
February 3, 2019
in News
439 4
0
613
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!

நிமிஷா சஜயனுடன் போட்டி போட்டு நடித்துள்ளேன்! – நடிகர் அதர்வா!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய   எதிர்பார்க்கப்பட்ட  ‘இளையராஜா 75’ விழா நேற்று மாலை   நடைபெற்றது. தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
பன்வாரிலால் புரோஹித் பேசுகையில் இளையராஜா எத்தனை கச்சேரிகள் நடத்தினார் .எத்தனை படங்களுக்கு இசை அமைத்தார் என்பதை புள்ளி விவரத்துடன் சொன்னார்.
தமிழ்த்தாய் வாழ்த்தினை முறை தவறி பாடியதை ஆளுநரும் அரசினரும் எப்படி அனுமதித்தனர் என்பது நேற்று புரியாத புதிர். தேசிய கீதத்தை அப்படி பாடியிருந்தால் அனுமதித்திருப்பாரா ஆளுநர்? பாடப்பட்டது தமிழ்த்தாய் வாழ்த்து தானே!
 
தலைவர் விஷால் பேசும்போது 
“இளையராஜா போன்ற ஒரு மாமேதை பிறக்கவும் முடியாது, இப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கவும் முடியாது. தந்தைக்காக மகன் கணக்கில்லாமல் செலவு செய்வது தப்பில்லை. அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தப்பு என்று சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், தந்தைக்கு செய்வது கடமை. அதுபோல், இளையராஜாவிற்காக இந்த விழா நடத்துவதில் எந்த தப்புமில்லை.
 
‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெரும் வசனம் தான் தோன்றுகிறது. ‘சில பேர் பாராட்டியே பேர் வாங்குவார்கள், சிலர் குற்றம் கண்டுபிடுத்தே பேர் வாங்குவார்கள்’ என்ற வசனத்திற்கேற்ப நாங்கள் இளையராஜாவை பாராட்டி வரலாற்றில் இடம்பெறுவோம். அதேபோல், இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று எதிர்த்தவர்களும் இடம்பெறுவார்கள்.
 
இதெல்லாம் நடக்குமென்று தெரிந்து தான் அன்றே இளையராஜா இசையமைத்திருக்கிறார் ‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா’ என்று. இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.”என்று  பொடி வைத்துப் பேசினார்.
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது :-
 
“என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்து இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான். நான் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால் தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
 
இளையராஜா பேசும்போது, ஏ.ஆர்.ரஹ்மான் அவர் அப்பாவிடம் இருந்ததை விட என்னுடன் இருந்த நேரம் தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் பணியாற்றியிருக்கிறார். என்றார்.
 
மேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க இளையராஜா பாடினார்
Tags: இசைவிழாஇளையராஜா.ரகுமான்விஷால்
admin

admin

Related Posts

‘பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
News

‘பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

by admin
June 13, 2025
கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!
News

கமல் பெயரில் படம் எடுக்கும் கன்னட அமைச்சர்.!

by admin
June 13, 2025
நிமிஷா சஜயனுடன் போட்டி போட்டு நடித்துள்ளேன்! – நடிகர் அதர்வா!
News

நிமிஷா சஜயனுடன் போட்டி போட்டு நடித்துள்ளேன்! – நடிகர் அதர்வா!

by admin
June 11, 2025
குப்பைத் தொட்டிக்குள்  ராஷ்மிகாவுடன் 7 மணி நேரம் இருந்த தனுஷ்!
News

குப்பைத் தொட்டிக்குள் ராஷ்மிகாவுடன் 7 மணி நேரம் இருந்த தனுஷ்!

by admin
June 12, 2025
வித்தியாசமான கதைக்களத்தில் உருவான ‘பேய் கதை’ !
News

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான ‘பேய் கதை’ !

by admin
June 11, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?