சிலருக்கு ஐயம்.
சினிமாமுரசத்தில் அரசியல் செய்தியா?
அரசியலின்றி இவ்வுலகம் இயங்குவதில்லை.
ஒருசார்பு செய்திகள் நமக்கு உடன்பாடு இல்லை.
முக்கியம் என தோன்றுவதை, மக்களுக்கு சொல்வதில் பிழையில்லை.
எனவே இது தேர்தல் காலம் என்பதால் கேள்விப்படுகிற செய்திகளை பங்கிடுகிறோம்.
இனி….
தைலாபுரம் தோட்டத்துக்குத்தான் இதர கட்சித் தலைவர்கள் செல்வார்கள். முதல் அமைச்சர்,துணை முதல் அமைச்சர் என ஆளும்கட்சி முகாமே அங்கு சென்றிருக்கிறது.
ஆனால் சாலிகிராமம் நோக்கி தைலாபுரம் சென்றிருக்கிறது.
பா.ம.க.வுக்கு செல்வாக்கு என சொல்லப்பட்ட வன்னியர்கள் அதிகம் வாழ்கிற தொகுதிகளில் சில தேமுதிக வசம் சென்றதை நாடறியும்.
பா.ம.க.போட்டியிடுகிற 7 பாராளுமன்ற தொகுதிகளில் கேப்டனின் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. அந்த கட்சியினரின் வாக்குகள் பா.ம.க.வுக்கு காட்டாயம் தேவை.
இதுமட்டுமல்ல.!
பா.ஜ.க.வின் மத்திய மந்திரி பியூஸ் கோயல் வார்த்தைகளில் வசிய மருந்து தடவி டாக்டரய்யாவுக்கே கொடுத்திருக்கிறார்.
“ஏழு தொகுதிகளில் நான்கு ஜெயித்தால் ஒருவருக்கு மந்திரி பதவி!”
ஆக இதை விட்டால் மறு வாய்ப்பு கிடைப்பது அரிதல்லவா!
எனவே இருமுடி கட்டி நடை பயணம் செல்லாமல் சாலிகிராமம் சென்று விஜயகாந்தை சந்தித்து இருக்கிறார்.
“உடல் நலம் பற்றி விசாரிக்க வந்தேன்” என வழக்கமாக எல்லோரும் சொல்வதை இவரும் சொல்லிவிட்டார்.
தற்போது சூட்சும கயிறு கேப்டன் விஜயகாந்திடம் இல்லை.பிரேமலதா விஜயகாந்திடம் இருக்கிறது.