கேம் ஓவர்…
மிகவும் வித்தியாசமான படம். நெடிய இடைவெளிக்குப் பின்னர் டாப்சி நடித்திருக்கும் படம்.
நடிகை என்றால் பட்டு மெத்தையில் படுக்கிறவள் என்கிற எண்ணம்தான் பெரும்பாலும் இருக்கும்.அது உண்மை இல்லை என மறுக்க இயலாது என்றாலும் எவ்வளவு கஷ்டம், துயரம் கடக்கவேண்டியதிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையே!
மலைப்பகுதியில் கடும் குளிரில் நடந்த படப்பிடிப்புகளில் கம்பளி ஆடையில்லாமல் மெல்லிய புடவை கட்டி நடித்ததால் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் காட்டுகிர௪ஆர் டாப்சி.
இரண்டாவது நயன்தாராவா டாப்சி சம்பளம் வாங்குவதில்?
கிண்டலாக பதில் வந்தது.
“எந்த தயாரிப்பாளராவது கோடிகளை கொண்டு வந்து கொட்டும் போது சொல்கிறேன் நான்தான் நயன்தாரா என்று!”
டாப்சிக்கு மங்கல்யான் படத்தில் நடித்தபோது பெரும் மனக்குறை !
அங்குள்ள விஞ்ஞானிகளில் ஒருவரைக்கூட சந்திக்க முடியவில்லையாம்!