இயக்கம் : தனம் சரவணன்,எழுத்து : நவீன் ( இயக்குநர். )தனம் சரவணன், ஒளிப்பதிவு :விஜயன் முனுசாமி, இசை :நடராஜன் சங்கரன்,
சமுத்திரக்கனி,சங்கவி, நைனா சர்வார், ‘பிச்சைக்காரன் ‘ மூர்த்தி,சென்றாயன் ( சிறப்புத் தோற்றம்.) கிருபாகரன், நசரத்,ராஜாஜி, நைனா சர்வார்.
***************
தணிக்கைக் குழுவின் ‘நிற வெறி’
கொளஞ்சி என்பது இங்கு ஒரு சிறுவனது பெயர். கொழுஞ்சி என செடியும் இருக்கிறது.. சமுத்திரக்கனிக்கு ஊரில் கருப்புச் சட்டை என்கிற சிறப்புப் பெயர். ஆனால் தணிக்கைக் குழுவுக்கு ‘நிற வெறி ‘போலும்.கருப்புச்சட்டை என்பதை (மியூட்.) ஊமையாக்கிவிட்டார்கள். ஓய்வில் இருந்த சங்கவியை தேடிப்பிடித்து கனிக்கு மனைவியாக்கினாலும் நல்ல பொருத்தம்.. இவர்களின் இளைய மகன் லெனின் கை சூம்பி.மூத்தவன் கொளஞ்சி..இவன்தான் கதையின் மையப்புள்ளி.( கிருபாகரன்.)
தன்வழி தனி வழி என வகுத்துக் கொண்டு அம்மாவின் செல்லப்பிள்ளையாக வளருகிறான். மகன் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என கண்டிப்புடன் வளர்க்கிறார்.கனி. மகனின் கடுஞ் சேட்டையும் சரி “ஒழிச்சுக் கட்டிருவேன்’என்கிற கனியின் கண்டிப்பும் சரி சம அளவில் இருந்தாலும் பயலின் ஆட்டம் நமக்கே சற்று கடுப்பை கிளப்பி விடுகிறது. ஆனால் சுயமரியாதை உள்ள பய.
தாழ்த்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த சிறுவர்களை விளையாட்டில் ஒதுக்குவதை கண்டு பொங்குகிறவன்.
பழுத்த ஆத்திகரான மூர்த்தியின் மகனை அடித்து விட பெரியவர்களிடையில் மூளும் சண்டை பெரியாரிஸ்ட் கனி-சங்கவி தம்பதியை பிரித்து விடுகிறது. இவர்கள் எப்படி சேருகிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.
என்றாலும் இலவச இணைப்பாக வேறு ஒரு ஜோடியின் காதல் கதையும் இருக்கிறது. பொடியன் கொளஞ்சியின் அட்வைஸைக் கேட்டு வளர்கிற காதல் அது. இன்னொரு பொடியன் இருக்கிறான்.ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் அவன் அசிரீரி மாதிரி. சற்று ஓவர்தான்!
கிராமங்களில் இன்னும் தாண்டவமாடும் சாதி வெறியை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். மூர்த்தி வழியாக வெளிப்படுகிறது. சிறுவர்களிடம் கூட அந்த வெறி இருப்பதை விளையாட்டாகக் காட்டியிருக்கிறார்கள்.வசனங்களில் வலிமை இருக்கிறது. வலியும் தெரிகிறது.
சமுத்திரக்கனிக்கு சுலபமான கேரக்டர். அசலாக வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு கருப்புச்சட்டையை மாட்டி விட்டால் அது தாலி வரை தாக்குகிறது.. அறுந்து விழுந்த தாலியைப் பற்றி மனைவி சங்கவி அழுது கதறினால் இந்த மனிதன் அதுதான் தேவையே இல்லை என்கிறார்.எத்தனை சு.ம.களுக்கு இந்த உணர்வு இருக்கிறது?
சற்று தடித்து செழிப்பாகவே காணப்படுகிறார் சங்கவி. நிறைவாக இருக்கிறது.
ஜெமினியாக ராஜாஜியின் கேரக்டர் .கேணையா, கெட்டிக்காரனா என தீர்மானிக்க முடியவில்லை.
தேவையற்ற டூயட் .தவிர்த்திருக்கலாம்.
“தமிழன்டா’ பாடல் நாடே கேட்கவேண்டிய பாட்டு. சென்றாயன் பாடி ஆடுவதைப் போல படமாக்கியிருக்கிறார்கள். அடிவாங்கி சொன்னதைப் போல ‘அது கொஞ்சம் ஓவர்தான்!
ஆங்காங்கே சலிப்புத்தட்டுகிறது. டைட்டில் பெயர் என்பதால் அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து இழுத்து விட்டார்கள்.
சினிமா முரசத்தின் மார்க் .2 / 5