மது பிரகாஷ். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.
சினிமா.சீரியல் என தொழில் நடக்கிறது. பாகுபலியில் அவர் முக்கிய வேடமொன்றில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
2015-ல் பாரதி என்கிற பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
கணவன் தாமதமாக இரவு வீடு திரும்புவது பிடிக்கவில்லை. இதனால் இருவரும் அவ்வப்போது மோதிக் கொள்வது உண்டு.
சம்பவத்தன்று “இன்னிக்கி காலை பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க” என்று பாரதி சொல்ல, அதற்கு மது “இன்னிக்கி ஜிம்முக்கு போயிட்டு அப்படியே சீரியல் ஷூட்டிங் போறேன் ” என சொல்லியிருக்கிறார்.
ஆனால் இரவு ஏழரை மணி அளவில்தான் வீடு திரும்பி இருக்கிறார்.
ஆனால் பாரதி தூக்கில் தொங்கியதைத்தான் பார்க்க முடிந்தது.
மனைவியின் சொல்லை புறக்கணித்ததின் விளைவு ஓர் உயிர்ப் பலி!