இயக்கம் : நாகன்னா ,திரைக்கதை :ஜெ.கே.பாரவி, இசை :வி.ஹரி கிருஷ்ணா , ஒளிப்பதிவு : ஜே.வின்சென்ட், வசனம் :மோகன்
அர்ஜுன், தர்ஷன், மறைந்த அம்பரீஷ், வி.ரவிச்சந்திரன், சினேகா,சோனு சூட்,
********************
மகாபாரதத்தில் கர்ணன்-துரியோதனன் நட்புக்கு வலுவேற்றி கதை சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். அதனால்தான் முனிரத்னாவின் குருஷேத்திரம் என பெயரிட்டிருக்கிறார்கள். இந்த ஷேத்திரத்தின் நாயகன் துரியோதனன். டப்பிங் நாயகனின் பெயர் தர்ஷன். ஆக்சன் கிங் அர்ஜுன்தான் கர்ணன்.
இந்த படத்தின் பிரமாதம் அண்ட் பிரமாண்டம் காட்சிகள்தான் துரியோதனின் அரண்மனை ஆகட்டும்,தர்பார் மண்டபம் ஆகட்டும் கண்களை அகல விரிக்க வைக்கிறது. யுத்த களம் விஎபெக்ஸ்,சி ஜி ஒர்க்ஸ் மிரட்டலாக இருக்கிறது. இரண்டுவருட உழைப்புத் தெரிகிறது.
துரியோதனனை “யாரடி நீ மோகினி ” பாடல் ரேஞ்சுக்கு ஆட விட்டு அமர்க்களம் பண்ணியிருக்கிறார்கள். கன்னட மொழி மாற்றுப் படம் என்பதால் பெரும்பாலான நடிகர்கள் அந்நியமாகத் தெரிகிறார்கள்.
கர்ணனாக வாழ்ந்து மறைந்திருக்கிற சிவாஜி கணேசனை ஏனோ மறக்க முடியவில்லை. துரியோதனனுடன் வாதிடும் கட்டத்தில் அர்ஜுனின் சிறப்பான நடிப்பு பளீச்.! சில காட்சிகளே என்றாலும் சினேகாவை நினைவில் கொள்ள முடியவில்லை.
நெடுந்தூரம் நடந்த களைப்பு.
பிரமாண்டங்களுக்காக சினிமா முரசு மார்க் 2 / 5