ஏதாவது சாதனை செய்ய வேண்டுமே என்கிற நமைச்சல் பார்த்திபனின் வலது கைக்கு உண்டு.அதன் விளைவு எதிர்மறையாகப் போனாலும் பேசப்படுகிறவராக இருப்பவர் இந்த நமைச்சல் பேர்வழி.
அவர் செல்கிற ‘வழி’பெயரை’ எழுதி விடுகிறது.
அவரால் உருவாக்கப்பட்டிருக்கிற படம்தான் ஒத்த செருப்பு.
தலையில் அடித்துக் கொள்வதற்கா,அல்லது அதன் ஜோடியை தேடுவதற்காகவா? இந்த பொருளில் பார்க்காமல் ஒத்தை செருப்பினால் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படுகிறதல்லவா ‘தலைப்பைப் பார்த்ததும்.!
மக்களின் பார்வைக்கு இன்னமும் வராத படத்துக்கு திரை உலக பிரபலங்கள் என்ன சொல்வார்கள்?
உள்ளத்தைப் பலர் திறப்பதே இல்லை.
ஏதாவது சொல்லியாக வேண்டுமே என்கிற கடமைக்கு சிலர் பாராட்டுவார்கள்.
ஆனால் பார்த்திபன் படங்கள் அத்தகைய ஒப்புக்கு இனிப்பு தின்கிற படங்கள் அல்ல!
அவர்களால் பார்த்திபனைப் போல புதிய முயற்சியில் இறங்க முடியாது கமல்ஹாசனைத் தவிர.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் மற்றும் யாஷ் ஆகியோர் பாராட்டியிருக்கிறார்கள்.
“இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் சாதனையை வாழ்த்திப் புகழ்ந்திருக்கிறார்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் “பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப் டைட்டிலுடன் படத்தை ஆஸ்கார் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும் “என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தியேட்டர் அதிபர்களிடம் போதுமான தியேட்டர்களை ஒதுக்கித் தருக என சொல்லியிருந்தால் அது நூறு ஆஸ்காருக்கு சமம்.!
உலக நாயகன் கமல்ஹாசன் தன் வாழ்த்துச் செய்தியில்,ஏற்கெனவே ஒற்றைப் பாத்திரமாக படம் முழுவதும் வந்த ராபர்ட் ரெட்ஃபோர்ட், டாம் ஹார்டி ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் பார்த்திபனும் இணைந்து விட்டது நிதர்சனமாகத் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.சிலரை உதாரண புருசர்களாக சொல்லாவீட்டால் தலை வெடிக்கும் வரம் வாங்கிய மனிதர்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நண்பர் பார்த்திபனின் தனித்துவம் மிக்க திரைப்பட சோதனை முயற்சி இது என்று தெரிவித்திருக்கிறார்.தங்களால் முடியாதது “என்பதை இவர் கம்பீரமாக ஒத்துக் கொண்டதற்கு பாட்டு பாடி புகழ்ந்தாலும் தகும்.
இந்தி நடிகர் ஆமிர்கான், வழக்கத்துக்கு மாறான மிகப் புதிய முயற்சி இது. இதைப்பற்றி பேசுவதற்கே பரவசமாக இருக்கிறது என்று சொல்கிறார்.
கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ், யாருமே பயணப்படாத புதிய பாதையில் பயணப்படுவது பார்த்திபனுக்கு கைவந்த கலை. எங்களைப் போன்ற நடிகர்கள் செய்ய பயப்படுவதை அவர் எளிதாகச் செய்திருக்கிறார் என்று உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர், “இதுதான் தனி மனித சாதனை. ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த செருப்பு யாருடையது என்பதைத் தெரிந்து கொள்ள முயலும்போது ஆர்வம் அதிகரிக்கிறது” என்றார்.
ஆஸ்கர் விருதுக்கு முழு தகுதியுள்ள இந்தப் படத்திற்கு ஏற்கெனவே ஆஸ்கர் விருதை வென்ற புரொடக்ஷன் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் தன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.
ராம்ஜி ஒளி்ப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.சத்யா பின்னணி இசைக் கோர்பு செய்திருக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்துக்கு அகடமி விருது வென்ற ரசூல் பூக்குட்டி கலை இயக்குநராகவும், அம்ரித் ப்ரீத்தம் சவுண்ட் டிசைனராகவும் பொறுப்பற்றிருக்கின்றனர். பாடல்களை விவேகா எழுதியிருக்கிறார்.
வித்தியாசமான தலைப்பாக இருந்தாலும் ஒற்றை எழுத்து நெடிலாக மாறினால் என்ன ஆகும் என்கிற கவலை என் போன்ற எழுத்தாளர்களுக்கு!