தமிழக மக்களால் ஒதுக்கப்பட்டு விட்டது பா.ஜ.க.
இடைத்தேர்தலிலும் ,பாராளுமன்றத் தேர்தலிலும் “மதவாதக் கட்சி” என தமிழக மக்கள் அழுத்தமாக முத்திரைப் பதித்து புறக்கணித்து விட்டார்கள்.
மத்தியில் மந்திரியாக இருந்த பொன்னார், மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தேசிய செயலாளர் எச் .ராஜா ஆகிய முக்கிய புள்ளிகளை மக்கள் தோற்கடித்து விட்டனர்.
மத்தியில் பாஜக பவரில் இருப்பதால் தமிழிசையை தெலங்கானாவுக்கு ஆளுநராக நியமித்து விட்டது. அரசியல்வாதிகளுக்கு ஆளுநர் பதவிதானே கடைசிப் புகலிடம் .
தமிழிசை தெலங்கானாவுக்குப் போனதால் இங்கு தலைவர் பதவி காலி.
அந்த பதவிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நியமிக்கப்படலாம் என சில ஊடகங்கள் யூகித்தன.
ஆனால் சத்தியம் செய்யலாம் அந்த பதவியை அவர் ஏற்க மாட்டார்.
தனியாக நின்றாலும் 6 சதவிகிதம் வாக்குகளை அவரால் பெற முடியும். திடீர் திடீர் என மைக்கை நீட்டினால்தான் அவரால் பதில் சொல்ல முடிவதில்லை. ஆனால் மேடை போட்டுப் பேசினால் பின்னி எடுத்து விடுவார். அந்த அளவுக்கு ஆற்றல் உள்ளவர். சமயங்களில் புள்ளிவிவரங்கள் அவரை வாரி விடுவதுண்டு.அது அவர்களது உதவியாளர்களின் தவறே!
தனிக்கட்சி அமைத்து மிரட்டக்கூடிய வலிமை உள்ள ரஜினி நிச்சயம் பாஜகவின் தலைமைப் பதவியை ஏற்க மாட்டார்.
தற்போது பாஜகவுக்கு ஆற்றல் மிகுந்த தலைமையை விட மக்களிடம் நன்கு அறிமுகமான முகம் தேவைப்படுகிறது. அந்த தலைமைக்கு ஜாதிப் பின்னணியும் அவசியம் தேவை. தமிழகத்தில் தெலுங்கு பேசுகிறவர்கள் பரவலாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்த அடிப்படையில் திரட்டினால்தான் பாஜகவினால் கால் பதிக்க முடியும். அதற்கு சரியானவராக விஷால் இருக்கலாம்.
விஷாலின் தேவைகளை மத்திய பாஜகவினால்தான் செய்ய முடியும். அது ஒரு பெரிய காரியமே இல்லை. இந்தியாவின்மிகப்பெரிய பணக்கார கட்சி பா.ஜ.க.தான்!
ஆக அரசியலுக்கு விஷாலை இழுக்கிற முயற்சியில் ஆந்திர-தமிழக பிரமுகர்கள் இறங்கி இருக்கிறார்கள்.அது பலிக்கலாம்.காலம்தான் பதில் சொல்லும்!