“ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.ஏன்,ஏன் ?பல எண்ணத்தில் நீந்துகிறேன் ” இந்த பாடலுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வசந்த மாளிகையில் பட்டையை கிளப்பி இருப்பார். அவர் நடித்திருந்த வசந்த மாளிகை விழா கொண்டாடியது. மதுவின் கொடுமையை ரத்தம் கக்க சொன்ன கதை அது.
பொதுவாக திரை உலகில் மதுவுக்கு அடிமையாகாத நடிக நடிகையர் மிகச் சிலரே.!
வெளியில் சொல்வதில்லை. ஆனால் பார்ட்டிகளில் கிண்ணங்களை ஏந்தி அதகளம் பண்ணுவது நடிகைகளாகத்தான் இருக்கும். அண்ணா சாலையில் இருக்கும் அந்த நட்சத்திர ஹோட்டல் பல கதைகளை சொல்லும். ஜெமினி கார்னரில் உள்ள அந்த ஹோட்டலிலும் பல நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றன.
நான் மது அருந்தினேன் என சொல்வதை அவமானமாக கருதுகிறவர்கள் மாலை மயங்கியதும் அந்த சனியனைத் தொடுவது ஏன்?
ஆனால் ஸ்ருதிஹாசன் அவர் ஒரு மது விரும்பியாக இருந்ததை அச்சமின்றி சொல்லி இருக்கிறார். உண்மைய சொல்வதில் என்ன பிழை இருக்கிறது?
நடிகை லஷ்மி மஞ்சுவின் கேள்விக்கு அவர் சொன்ன பதில்.
“நான் ஆல்கஹால் அடிமையாக இருந்திருக்கிறேன். விஸ்கி அருந்தினேன். இரண்டு ஆண்டு காலம். அதனால் எனது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து விலக பெரும்பாடு பட்டேன்.தப்பிப் பிழைத்தேன்.இப்போது தொடுவதில்லை. எனது வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறேன்”என கூறி இருக்கிறார்.