தமிழ்ச்சினிமாவில் தகராறு பிடித்த நடிகை யார் என்றால் மீரா மிதுனைத்தான் கை காட்டுகிறார்கள்.போலீஸ் கேஸ் வரை போன புண்ணியவதி.
தற்போது சிவகார்த்திகேயன் மீது முதல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
“நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் என்னுடைய சீன்களை வெட்டி விட்டார்” என பழி போட்டிருக்கிறார்.
அடுத்த குற்றச்சாட்டு உலகநாயகன் கமல்ஹாசன் மீது !
“தமிழ்ச்சினிமாவில் வேண்டியவர்களுக்கு, சொந்தங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிற நெபோடிசம் பரவி இருக்கிறது. அக்னிச்சிறகுகள் படத்தில் என்னை தூக்கிவிட்டு தன்னுடைய மகளை போடச்செய்திருக்கிறார் கமல்ஹாசன் .டைரக்டர் நவீனும் தயாரிப்பாளர் டி.சிவாவும் இரட்டை வேடம் போடுகிற ஆள்களாக இருக்கிறார்கள்.” இப்படி கடுமையான குற்றங்களை வைத்திருக்கிறார் மீரா மிதுன்.