நாடே அழுதது பாலகன் சுஜித்துக்காக!
ஆள்துளைக் கிணறு வழியாக சிறுவர் சிறுமிகளை காவு வாங்குகிற எமனிடம் தொடர்ந்து தோல்விகள்.
கற்பனை செய்ய முடியவில்லை சுஜித் எப்போது இறந்திருப்பான் என்பதை!
கைகளை வெளிக்காட்டியபோது ஜீவனும் சேர்ந்து வெளியேறிவிட்டதோ?
என்னெவெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
அறம் படத்தின் வழியாக இயக்குநர் கோபி நைனார் அழுத்திச் சொல்லியிருந்தார் மரணக் கிணற்றின் பேராபத்தை.!
அவர் சொல்லியதை போலத் தானே சுஜித் விஷயத்திலும் நடந்திருக்கிறது.
இப்போது கோலிவுட்டின் கோபப்பார்வை ‘அறம் ‘படத்தின் நாயகி மீது.!
நயன்தாராவுக்கு தனித்த மேடையை அமைத்துக் கொடுத்ததே அறம் படம் தான்.!
குழியில் கிடந்த சிறுவனுக்காக அரசியல்வாதிகள்.அரசாங்க அதிகாரிகள்,மற்றும் மக்களிடம் அவர் போராடியதை அவரது இயல்பான குணம் என எண்ணினார்கள்.
ஆனால் அது எல்லாம் ஸ்கிரிப்ட் ,இயக்குநரின் வழி காட்டுதல் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக உணர்த்தி இருக்கிறார்.
சுஜித்தின் மரணப்போராட்டத்தில் நாடே எல்லா கடவுள்களிடமும் உருகி மருகி உயிர் பிச்சை தாருமய்யா என பிரார்த்தனையில் இருந்தபோது இவர் எங்கே இருந்தார்?
எந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் ?
லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அடையாளத்தைக் கொடுத்த ஊடகங்கள் வழியாக சுஜித்துக்காக கர்த்தரிடம் கையேந்தி இருக்கலாமே!
இறந்த பிறகு இரங்கல் செய்தியாவது அனுப்பி இருக்கலாமே?
கீர்த்தி சுரேஷிடம் இருக்கும் மனிதாபிமானம் கூட நயனுக்கு இல்லையே?
“சுஜித்தின் குடும்பத்துக்கு கடவுள் தைரியத்தை கொடுக்கட்டும்” என்று கீர்த்தி பிரார்த்தனை செய்திருக்கிறார்.
பூமி கைவிட்டது.
வானம் அழுதது
இது கீர்த்தியின் ரசிகர்கள்.