கீதாஞ்சலி இன்று நம்மிடையே இல்லை.
தெலுங்கு தேச நடிகை என்றாலும் தமிழில் சாரதா,தெய்வத்தின் தெய்வம்,கங்கா கவுரி,அன்னமிட்ட கை ,வாழ்க்கைப்படகு,அதே கண்கள் நெஞ்சிருக்கும்வரை உள்ளிட்ட 13 தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார்,
தமிழ்,மலையாளம் இந்தி ,தெலுங்கு என நான்கு மொழிகளிலும் 500 படங்கள் நடித்திருக்கிறார். இவரை திரை உலகுக்கு அறிமுகம் செய்தவர் என்.டி .ராமராவ். காக்கிநாடாவில் பிறந்த இவரது ஒரிஜினல் பெயர் மணி. தன்னுடன் நடித்தவரையே கல்யாணம் செய்து கொண்டார். ஆஸ்திக்கு ஒரே மகன் அதீத் சீனிவாஸ் .
மகனுக்கு எங்கே பெண் எடுத்திருக்கிறார் தெரியுமா?
யானைக்கு அல்வா கொடுத்த முக்கூடல் சொக்கலால் ராம்சேட் பீடி அதிபர் வீட்டில் சம்பந்தம் செய்திருக்கிறார்.பிரசன்னாவின் மகளைத்தான் தனது மருமகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
கீதாஞ்சலி சென்னையில் உள்ள கோல்டன் கேர்ள்ஸ் குரூப் உறுப்பினர். இந்த அமைப்பினை ஏற்படுத்தியவர் ஜெயந்தி கண்ணப்பன். கவிஞர் கண்ணதாசன் குடும்பத்தை சேர்ந்தவர். இந்த அமைப்பில் 45 நடிகைகள் இருக்கிறார்கள். கீதாஞ்சலி மரணம் பற்றிய செய்தி வந்ததும் குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் செய்திகள் பறந்தது.
கோல்டன் கேர்ள்ஸ் உறுப்பினர்கள் கூட்டம் பார்க் ஹோட்டலில்முன்பு நடந்தபோது எடுக்கப்படட படம் மேலே இருக்கிறது.
அமெரிக்காவில் இருந்து நடிகை பிரமீளா போன் செய்து துக்கம் விசாரித்து இருக்கிறார்.
கீதாஞ்சலிக்கு சென்னையில் நிறைய சொத்துக்கள் இருந்தது. அதை கவனிக்க போதிய ஆட்கள் இல்லாததால் விற்று இருக்கிறார்கள்.
கீதாஞ்சலி சென்னை வரும்போதெல்லாம் தனக்கு விருப்பமான ஆப்பம் வேண்டும் என்று ஜெயந்தி கண்ணப்பனிடம் சொல்ல இவரும் சவேரா ஹோட்டலில் ஏற்பாடு செய்வார். பிறகென்ன சக நடிகைகள் சூழ அன்றைய டின்னர் அமர்க்களப்படும்.
ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பக்கத்தில் இருக்கிற தனியார் ஆஸ்பத்திரியில்தான் உயிர் பிரிந்திருக்கிறது. மாரடைப்பு.என்ன செய்வது நல்லவர்கள் மரணம் ஹார்ட் அட்டாக்கில்தான் முடிகிறது.