ரொம்ப காலத்துக்குப் பிறகு சரண் டைரக்ட் பண்றார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.னு பேர் .
ராதிகா சரத்குமார் வட சென்னை தாதா .சும்மாவே பொளந்து கட்டுறவர். வகை தொகையா வந்து மாட்டி இருக்குது கேரக்டர். பைக் ஓட்டுறார்னா பாத்துக்குங்க.
சுருட்டு பிடிச்சமாதிரியே குளு குளுன்னு கண்ணாடி போட்டுக்கிட்டு பைக்ல போற படத்தை வெளியில விட்டிருக்காங்க. தைலாபுரம் தோட்டத்திலேர்ந்து ,சமூக ஆர் வலர்கள் வரை எத்தனை குறுக்கு கட்டைகள் .நல்லவேளை தோட்டத்திலேர்ந்து ஒன்னும் கெளம்பல.
மக்கள் நல்வாழ்வுத் துறை டைரக்டரேட்ல இருந்து யாரோ தூங்கி எந்திரிச்சி ஒரு நோட்டீசை விட்டிருக்காங்க. இதுவரை இந்த சைடில் இருந்து எந்த படத்துக்கும் எதிர்ப்பு வந்த மாதிரி தெரியல. இப்பதான் நம்ம காதுக்கு வந்திருக்கு.
“மக்கள் நல் வாழ்வுத் துறை வகுத்துள்ள விதிகளுக்கு மீறாக புகை பிடிக்கும் காட் சி இருக்கு.அதனால 7 நாளுக்குள்ள நீக்கிடனும்.இல்லேன்னா சட்டத்தை சந்திக்க வேண்டும் ‘னு நோட்டீஸ் விட்ருக்காங்களாம்.
அய்யா படத்திலேர்ந்து தூக்கணுமா இல்ல விளம்பரத்திலேர்ந்து எடுக்கணுமா?
புதுசா நீங்க வந்து முட்டுக்கட்டை போடுறிகளே ?
விளம்பரம் பண்ணாமே இருந்தாபோதும்னு சொன்னா அதுக்கு எதுக்கு இந்த பில்டப்பு!