நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.
போராட்டங்களை கடுமையான முறையில் போலீஸ் அடக்கி வருகிறது. போராடிவரும் மாணவர்களின் பைக் ஸ்கூட்டர்களையும் விடவில்லை. அடித்து நொறுக்கிவருகிறது.
பாஜக அரசுவின் குடியுரிமை மசோதாவை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் கோர்ட்டுக்கு போயிருக்கிறார்.
பிரபல இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
“இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது.
மாணவர்கள் மீதான அடக்குமுறை தவிர்க்கப்படவேண்டும்.
இந்தியாவின் இறையாண்மை காப்பாற்றப்படவேண்டும்.
குடியுரிமை மசோதா இந்தியாவுக்கு வேண்டாம்.அது இந்தியாவின் கொள்கைக்கு எதிரானது”
இவ்வாறு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.