மிகவும் பரபரப்பான சூழலில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. திமுக முன்னிலை வகிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
“தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடிக்கிறார்கள் மை லார்ட் !” என்கிற திமுகவின் குரலுக்கு நீதி மன்றம் உடனடியாக தீர்ப்பு அளித்திருக்கிறது. திமுகவின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இன்று காலை 10.30 மணி அளவில் உள்ளாட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் .மொத்த இடம் 5090 .திமுக முன்னணி 2263.அதிமுக முன்னணி 2049. மற்றவர்கள் 517.
மாவட்ட கவுன்சிலர் பதவி ; திமுக முன்னணி 251 அதிமுக்கிய முன்னணி 225 .பிற 2 .மொத்த இடம் 515 .
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ தோல்வி.
சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.இளையக்கண்ணு தோல்வி அடைந்திருக்கிறார்.
வேட்பாளர்கள் மீது தடியடி .
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகளை புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எண்ணிக்கொண்டிருந்தனர்.அங்கு திரண்டிருந்த வேட்பாளர்கள் அவர்களது ஏஜெண்டுகள் முண்டியடித்தபடி அவர்களது எல்லையைத் தாண்டியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி தடுத்தார்கள்.
79 வயது பாட்டி வெற்றி.
மேலூர் ஊராட்சி ஒன்றியம் அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவராக 79 வயது பாட்டி வீரம்மாள் வெற்றி பெற்றிருக்கிறார்.