கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.


எங்கள் சகோதர, சகோதரிகளுடன் நாங்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாங்கள் போரை விரும்பவில்லை.நாட்டு மக்கள் கேட்டதாலேயே சுலைமானி கொலைக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தினோம்.
உலகில் அமைதியை நிலைநிறுத்துவதில் இந்தியா சிறந்த பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவுடன் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையில் தலையிட்டு தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.