ரசிகர்கள் மத்தியில் நட்சத்திரங்கள் செல்கிறபோது பலவிதமான அன்புத் தொல்லைகளை சந்தித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் சுற்றுப்பயணம் செய்கிறபோது எப்படியாவது தொட்டு விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமிகுதியுடன் வருவார்கள். சிலர் கை குலுக்க ஆசைப்படுவார்கள்.
அங்கேதான் அவர்களையும் அறியாமல் நகங்களால் கீறி விடுகிறார்கள். சிவாஜிகணேசன் சுற்றுப்பயண முடிவில் தன் காயங்களை பத்திரிகையாளர்களிடம் காட்டியிருக்கிறார்.
நடிகைகளின் அனுபவம் வேற மாதிரி….
நமீதா பிரமோத். மலையாளத்தில் பிரபலம். இவரது அனுபவத்தை சொல்கிறார்.
“ரசிகர்கள் பலவிதம்.மனைவி மக்களுடன் வருகிற ரசிகர்கள் செல்பிஎடுத்துக் கொள்ள விரும்புவார்கள்.கவுரமாக நடந்து கொள்வார்கள். இன்னும் சில வேறு மாதிரி. செல்பி எடுக்கிற சாக்கில் என்னுடைய தோளில் கை போட பார்ப்பார்கள்.அவர்களை தவிர்ப்பதற்கு தனி திறமை வேண்டும். அத்தகைய செயல்களை வெறுக்கிறேன்.இதனால் வெளியில் போகும்போது பர்தா தான் பாதுகாப்பாக இருக்கிறது.”