திரையுலகம் சார்ந்த அகில இந்திய கூட்டமைப்பாக மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா’ (மும்பை) அமைப்பின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் ’பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ‘வின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தலில் தலைவராக திரு டி.பி.அகர்வால் அவர்களும்,செயலாளராக திரு. ரவி கொட்டாரக்கரா அவர்களும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.துண
தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஒருவர் ‘பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா’ வில் பிரதிநிதித்துவம் பெற்று பங்கேற்கும் வகையில் தயாரிப்பாளர் T.சிவா இப்பொறுப்புக்குப் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இவர் தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.
இவை மட்டுமல்ல பிலிம் சேம்பர் என அழைக்கப்படும் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’க்கு 2011-2012-ல் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தவர்.
இவர் ஏற்கெனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 2011-2013-ல் துணைத்தலைவராகவும்,2013-2014-ல் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர். இப்போது 2015- 16ல் செயலாளராகவும் இருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது..