ரஜினிகாந்த், முருகதாஸ் ஆகியோரின் வீடுகளை முற்றுகை இட்டும் முயற்சி வெற்றிபெறாத விநியோகஸ்தர்கள் மனம் தளராமல் அடுத்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். தர்பார் படத்தை ஏரியா வீதம் வாங்கியவர்களில் காளியப்பன் ( செங்கல்பட்டு ) சிவா (கோவை ) பிரவீன் (மதுரை ) கார்த்திகேயன் (திருச்சி ) கண்ணன் (நெல்லை ) ஜோன்ஸ் (சேலம்) திருவேங்கடம் ( ஆற்காடு மாவட்டங்கள் ) ஆகியோர் முக்கியமானவர்கள்.
அண்மையில் விநியோகஸ்தர்கள் அமைப்புக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் டி .ராஜேந்தர்.
இவரிடம் கடைசி நம்பிக்கை வைத்து விநியோகஸ்தர்கள் முறையிட்டு மனு கொடுத்திருக்கிறார்கள்.
இவர் தயாரிப்பாளராகவும் இருப்பவர். முன்னணி நடிகரான சிம்புவுக்கு அப்பா. உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிக்கு நண்பர்.
இவரால் என்ன செய்ய முடியும் என்கிற கேள்வி எழாமல் இல்லை.
நட்டப்பட்டதாக சொல்கிற விநியோகஸ்தர்களுக்கு யாரிடம் இருந்து இழப்பீடு வாங்கித் தருவார்?
லைகா நிறுவனம் மதுரை அன்புச்செழியனிடம் இருந்து கடன் வாங்கி இருப்பதாக அண்மையில் நடந்த ஐ.டி .ரெய்டு வழியாக தெரிய வந்திருக்கிறது. இதனால் லைகாவிடம் இழப்பீடு கேட்க முடியுமா?
படத்தயாரிப்பில் 70 சதவீதம் ரஜினி ,முருகதாஸுக்கு கொடுக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா பொய்யா என்பதையும் பார்த்து விட்டுத்தான் அவர்கள் வீட்டுக் கதவை தட்ட முடியும். என்ன செய்யப்போகிறார் டி. ஆர்.
எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிறார் ராஜேந்தர்.!