இந்திய அரசியல் கட்சிகளில் மூத்த கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்னு. இந்த கட்சிக்கு தமிழக சினிமாவில் கிடைத்த மிகப்பெரிய அடையாளமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.கோஷ்டி அரசியல் நடத்தி சிவாஜியையும் அந்த கட்சி வெளியே அனுப்பி விட்டது. பெருந்தலைவர் காமராஜரை நம்பி சில முக்கிய நடிகர்களின் ஆதரவு அந்த கட்சிக்கு கிடைத்திருந்தது.
அவரது மறைவுக்கு பிறகு சினிமாவில் அந்த கட்சிக்கு ஆள் கிடைக்கல. ஆனா மக்கள் மத்தியில பாஜகவுக்கு ஆதரவு இல்லேன்னு சொன்னாலும் சினிமா உலகில் இருந்து முக்கியமான ஆட்கள் அந்த கட்சிக்கு கிடைச்சிருக்காங்க.ராதா ரவி ,காயத்ரி ரகுராம் இவங்க ரெண்டு பேரும் சரியான பிரசார பலம்.பீரங்கின்னு சொன்னாலும் தப்பில்ல.
காயத்ரினாலே ஒரு பக்கம் பிரச்னையான ஆளுங்கிற பேர் இருக்கு. ஆனாலும் திமுகவுக்கு சரியான எதிரடி கொடுக்கிற டான்ஸ் மாஸ்டராகவும் இருக்கிறார்.
எதை வெச்சு இப்படி சொல்றீங்க? கேட்கலாம்.
திருமாவளவன் ,செந்தில் ,ஜோதிமணி இவங்களை சஸ்பெண்ட் பண்ணுங்க..எம்.பி. எம்.எல்.ஏ.ன்னு பாக்காதீங்கன்னு சொல்ற தெம்பு இந்த காயத்ரிக்கு இருக்கே சார்,!
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பா நாடே கொந்தளிச்சு போயிருக்கு. டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு மானக்கேடான தோல்வி கிடைச்சதுக்கு அந்த சட்டம்தான் காரணம்னு சொல்றாங்க. சிறுபான்மை இனத்தவர்கள் அந்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்திட்டு இருக்காங்க. தடியடி நடத்தி எந்த அளவுக்கு மண்டைகளை உடைக்கலாமோ அந்த அளவுக்கு போலீசும் எறங்கியிருக்கு .!
இதையெல்லாம் திமுக,காங்கிரஸ் கட்சிகள்தான் தூண்டி விட்டிருக்கின்றன என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி “குடியுரிமை சட்டம் குறித்து விமர்சிப்பவர்களை விளாசித்தள்ளி”வருகிறார் .
சிறுபான்மை இயக்கத்தை சேர்ந்த இசுலாமிய அமைப்புகளும் அந்த சட்டத்துக்குஎதிரான போராட்டத்தில் குதித்துள்ளன.
“எம்.பி. அல்லது எம்.எல்.ஏ மட்டுமில்லை, சட்டத்திற்கு எதிராக வெறுப்பு மற்றும் வதந்தி செய்திகளை பரப்பும் யாராக இருந்தாலும் காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழ் நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துபதவிகளில் இருந்து அவர்களை நீக்க வேண்டும். செந்தில், ஜோதிமணி, திருமாவளவன் போன்றோரை சஸ்பெண்ட் செய்யுங்கள்” என்று கூறிஇருக்கிறார் காயத்ரி .
இந்த தில்லு தமிழ்நாட்டில் இருக்கிறபா.ஜ.க பிரமுகர்களுக்கு இல்லைங்கிறதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.