
“என் சோகக்கதையைக் கேளு தாய்க்குலமே “என்று பாக்யராஜ் ஒரு படத்தில் பாடியிருந்தார். அதற்கு கதையில் வேறு காரணம் இருந்தது.
ஆனால் இன்று எல்லா தயாரிப்பாளர்களும் (சில கோடீஸ்வர குபேரன்களை தவிர்த்து ) ரத்தக் காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள்கடனை வாங்கி அல்லது சொத்தை விற்று படத்தை எடுத்து முடித்துவிட்டால் அதை வெளியிடுவதற்குள் விழி பிதுங்கி விடுகிறது.
ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து லீவு எடுக்காமல் வேலை கற்றுக்கொண்டவர் வசந்தபாலன். தைரியமாக அங்காடித் தெரு படம் எடுத்து வெளியிட்டவர். அவர் ஜெயில் என்கிற படத்தை இயக்கி வந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார்,ராதிகா சரத்குமார் ,யோகிபாபு ,பிரேம்ஜி அமரன்,அபர்னதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தைப் பற்றிய அவரது ரத்தக் கண்ணீர் பதிவை பேஸ் புக்கில் பதிவு செய்திருக்கிறார். அதைப் படித்தால் புரிந்து கொள்வீர்கள்.
“ஒரு தயாரிப்பாளரை பிடிக்கிறதுக்கு தலைகீழா நிக்கனும்.
ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும்
ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும்.இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம்.
ஆனா…..இந்த எடுத்த படத்த ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது……..”.
இன்றைய தமிழ்ச்சினிமாவின் கதை இதுதான்.!












