“நேரில் வர முடியாது.வேணும்னா கேள்விகளை கொடுங்க .அதுக்கு நான் பதில் சொல்றேன்.நேரில் வந்தால் ரசிகர்கள் கூடி விடுவார்கள்.சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்து விடும் “என்று நேரில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார். இதற்கு பலவிதமான கருத்துகளை அரசியல் கட்சிகள் வெளியிட்டிருக்கின்றன.
சட் டம் ஒழுங்கு பிரச்னையை அவரே தூண்டி விடுவது மாதிரி இல்லையா என்பது பொதுமக்களின் கருத்தாகவும் இருக்கிறது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ,வன்முறை தொடர்பான விசாரணையில் நடிகர்
ரஜினிகாந்திற்கு விலக்கு அளிக்க கூடாது எனதமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் டைரக்டர் கவுதமன் கூறிஇருக்கிறார்
.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராடிய போது போலீசார் தாக்கியது வன்முறையாகும். வன்முறை சம்பவத்திற்கு பின் 9வது நாளாக இஸ்லாமிய பெண்களுடன் தமிழர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது அறமற்ற போக்காகும். தெலுங்கானா, கேரளா உள்பட பல மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியது. புதுச்சேரி யூனியன் பிரதேசமும் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் தமிழக அரசு பிடிவாதம் பிடிப்பது சரியானதல்ல.
ஜெயலலிதா இருந்திருந்தால் எங்களுக்கு நிம்மதியை தந்திருப்பார் என்பது தான் போராடும் பெண்களின் நிலை.
தமிழகத்தில் நடக்கும் மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து குடியுரிமை திருத்த சட்டம் உள்பட கருப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போராட்டினால் சுடுகாடாகி விடும் என்றும் சமூக விரோதிகளால் தான் வன்முறை நடந்தது. நேரம் வரும்போது அவர்களை அடையாளம் காட்டுவேன் என்று கூறிய ரஜினிகாந்த்திற்கு ஆஜராக சம்மன் அனுப்பியதற்கு விலக்கு கேட்கும் நிலையில்அவரால் மக்களை எப்படி காக்க முடியும்.
மக்களை கண்டு பயந்து மக்கள் பாதிக்கப்படும் போது வராமல் எப்படி நல்லாட்சியை தர முடியும். ரஜினியின் கோரிக்கையை விசாரணை நீதிபதி ஏற்க கூடாது. திரையில் நடிப்பதை போல் தரையிலும் நடிக்காமல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பார்த்த சமூக விரோதி பற்றிய தகவலை விசாரணையில் தெரிவிக்க வேண்டும். சம்மனுக்கு ரஜினி ஆஜராக வேண்டும்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். திரையில் இருந்த வந்த 5 பேர் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி உள்ளனர். அரசு திரைத்துறையை அங்கீகாரம் செய்யவில்லை. திரைத்துறை முலமாக வரியை பெறும் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்”.
இவ்வாறு அவர் கூறினார்.