பல்லு படாம பாத்துக்க…படத்தின் டைட்டிலே ஒரு மார்க்கமா இருக்குல்ல.
அந்த காலத்தில போலீஸ் முக்காடு கேஸ்னு ஒன்னு போடுவாங்க. இருட்டில மறைஞ்சி நின்னு ஆம்பளைகளை வா ஜாலியா இருக்கலாம்னு சொல்லி பொம்பளை கூப்பிட்டதாக கேஸ் எழுதுறதுக்குத்தான் முக்காடு கேஸ்.
புண்ணியவான் காமராஜர் ஆட்சியில்தான் அந்த முக்காடு கேசுக்கு மூடு விழா நடந்தது.
கால மாறுதல் ,நாகரிக வளர்ச்சி .மேலை நாட்டு பண்பாடு இவைகளுக்கு ஏற்ப சினிமாக்களும் மாறி வருகின்றன. இது தவிர்க்க முடியாதுதான் !
அட்லீஸ்ட் ..அப்பன் பெயரை இனிஷியலாக போடுகிற காலம் இருக்கிறவரை ஆபாசப் படங்களை தவிர்க்கலாமே.!
பல்லு படாம பாத்துக்க.
அட்டகத்தி தினேஷ் ,சஞ்சிதா ஷெட்டி ,ஸாரா,ஜெகன் ,இன்னும் அதிகமான நட்ஷத்திரங்கள்.
எழுத்து இயக்கம் விஜய் வரதராஜ் ,ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ,இசை பாலமுரளி பாபு.
படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி முடிந்ததும்.படப்பிடிப்புக்குழுவினர் பேசினார்கள்.
படத்தில் காணப்பட்ட ஆபாசங்களை அடல்ட் காமடி என்று சொன்னார்கள்.
“100 பெர்சன்ட் அடல்ட் காமடி .18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்துக்கு வரலாம் “என்று இயக்குநர் சொன்னார்.
“சினிமான்னா பொண்டாட்டியோடு வந்து பார்க்கணும்னுதான் ஆசைப்படுவாங்க.அதுக்கு வழியில்லாம போச்சே “என்பதற்கு வந்த பதில் “நாங்கள் விளம்பரத்திலேயே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரலாம் என்று போட்டிருக்கிறோம் “என்பதாக பதில் வந்தது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்கிற அடல்ட் படத்தில் நடித்தமுக்கியமான ஹீரோவை தற்போது படங்களில் காணோம். அவரும் அடல்ட் காமடி படங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டார்.
நல்ல கதைகளில் நடித்து வந்த அட்டக்கத்தி தினேசுக்கு என்ன வந்தது?
“வாய்ப்பில்லாத காரணத்தினால்தான் அடல்ட் காமடிப் படங்களில் நடிக்க வந்துவிட்டீர்களா?” என்கிற கேள்விக்கு “எனக்கு நிறையப்படங்கள் இருக்கு. நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இது செக்ஸுவல் ரக படம் இல்லை. ஆபாசப் படம் கிடையாது ” என சொல்கிறார்.