தனக்கு சொந்தமான சொத்தினை விற்பதற்காக வெளியூரில் இருந்து வருகிறவர்களுக்கு ஏற்படுகிற இன்னல் பற்றிய கதை தமிழ் சினிமாவுக்கு புதிது இல்லை.
தங்களுக்கு உரிமையுள்ள நிலத்தை விற்பதற்காக அக்கா தங்கை இருவர் ஊருக்கு பயணமாகிறார்கள். அவர்களுக்கு எத்தகைய ஆபத்துகள் காத்திருந்தது அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்களென்பது “யாருக்கும் அஞ்சேல் ‘படம் வந்தால் தெரியும்.
அக்கா தங்கையாக பிந்து மாதவி ,தர்ஷனா யானிக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 30 நாளில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது.தற்போது பட்டி ,டிங்கரிங் வேலைகள் நடக்கிறது.
“யாருக்கும் அஞ்சேல், திரில்லர் படம்.இந்த படத்துக்கு பெயர் வைப்பதுதான் பெரும் சவாலாக இருந்தது. மக்களை சென்றடையும் விதமாக டைட்டில் இருக்கவேண்டும் என்பதற்காக பல டைட்டில்களை பரிசீலனை செய்தோம் .முடிவில் யாருக்கும் அஞ்சேல் என்கிற தலைப்பு தேர்வு ஆகியது”என்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.
தற்போதெல்லாம் படத்தின் டைட்டிலை கூட பிரபலங்களை வைத்து வெளியிடுகின்ற நிலை இருக்கிறது. போஸ்டரும் பிரபலங்கள் வழியாகத்தான் வருகின்றன.போகிற போக்கில் நடிகர் நடிகையர் பட்டியலை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
யாருக்கும் அஞ்சேல் என்கிற டைட்டிலை மக்கள் செல்வன் விஜயசேதுபதி , லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன் இருவரும் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.