முக்கியமான நடிகைகளை அயிட்டம் டான்ஸுக்கு கூப்பிட முடியாது.
அப்படி அவர்களை கூப்பிட்டுவதென்றால் அவர்களது ஒரு படத்துக்கான சம்பளத்தில் பாதியை அந்த ஒற்றைப்பாடலுக்காக கொடுத்தாக வேண்டும்.
“கஷ்டத்திலே இருக்கேன். கை தூக்கி விடும்மா”என்று தயாரிப்பாளர் கெஞ்சினாலும் “கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி ‘தான்.!
ஆனால் ரெஜினா காசென்ட்ரா அப்படிப்பட்டவர் இல்லை.அயிட்டம் டான்ஸ் ஆடியதில்லை.
தற்போது தமிழ் சக்ரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் முக்கியமான வேடத்தில் சிரஞ்சீவி நடித்துக்கொண்டிருக்கிற பிரமாண்டமான படம் ‘ஆச்சார்யா’ ,மகேஷ் பாபு ,திரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் ஸ்பெஷல் டான்ஸ் ( அயிட்டம் டான்ஸ் ?) ஒன்று இருக்கிறது.
இதற்கு ரெஜினாவை கூப்பிட்டிருக்கிறார்கள்.
“இதுவே எனது முதலும் கடைசியுமான ஸ்பெஷல் டான்ஸ் ஆக இருக்கட்டும்”என்று சொல்லி சிரஞ்சீவியுடன் ஆட சம்மதம் சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்.காலம் எத்தனையோ பேர்களின் வாக்குறுதிகளை உருட்டி விட்டிருக்கிறது.
ரெஜினா எம்மாத்திரம்?