என்னதான் சொல்லுங்கள் கணவனின் மடியில் மனைவி தலை வைத்து கண்ணயர்வது ஒரு சுகம்தான்.!
இரவு முழுவதும் ஒருவர்க்கொருவர் புறம் தழுவி அயர்ந்து உறங்கினாலும் ஒருவர் விழித்திருக்க மற்றவர் மடி சாய்ந்து தூங்க ,,,அடடா எப்படியெல்லாம் கனவு வரும் தெரியுமா?
சொர்க்கம் மதுவில் இல்லை; மடியில் இருக்கிறது..!
இத்தகைய அனுபவம் எத்தனை பேர்க்கு ?
எந்திரமயமாகி விட்ட இந்த உலக வாழ்க்கையில் கூடலுக்கான காலமும் நேரமும் மிகவும் குறுகிப்போய் இருக்கிறது. நாளைய உலகில் நம்மைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் அரிதாகிவிட்டாலும் வியப்பதற்கில்லை.
பிரியங்கா சோப்ரா ,நிக் ஜோனஸ் இந்திய -ஆங்கிலேய கூட்டுறவு பிரதிநிதிகள்.நாடு மதம் கடந்து நடந்த கல்யாணம்.
பாப் பாடகரான நிக் தனது இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு மனைவியுடன் ஸெல்ப் குவாரன்டைனில் இருக்கிறார்.
அந்த நாய் கொடுத்து வைத்தது.!
இருவரும் எப்படி இருக்கிறார்கள் என்பதை படத்தைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.