https://twitter.com/i/status/1294620532445335552
வாழப்பிறந்தவள் நான் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர் அமலாபால்.
ஏனென்று கேட்பாருமில்லை ,இப்படி செய்யலாமா என்று அதட்டி கேட்க வீட்டுக்காரனுமில்லை என்று விவாகரத்து செய்து விட்டு தன்னந்தனியாக பறந்து கொண்டிருக்கிற சுதந்திரப்பறவை.
லாக் டவுனில் கேரளாவில் வீட்டுக்குளேயே முடங்கி கிடந்த அமலா பால், லாக்டவுன் தளர்வு காரணமாக சுற்றுலா செல்ல ஆரம்பித்து விட்டார்.
ஆண் நண்பர்கள், உறவினர்களுடன் சந்தோஷமாக செலவிடும் தருணங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
கேரளாவில் பிரபலமான போட் ஹவுஸில் தனது உறவினர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டு இருந்த நடிகை அமலா பால், சிறு வயது முதலே இவருடன் தான் பழகி வளர்ந்து வந்தேன். ஆனால், சில காலங்கள் பிரிந்து விட்டோம். மீண்டும் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது என புகைப்படம் வெளியிட்டு பதிவிட்டு இருந்தார்.
ஒருவேளை அவர்தான் விவாகரத்துக்கு விதை போட்டவரோ என்னவோ?
தனது இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை அமலா பால், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களாக பதிவிட்டு வருகிறார்.
குட்டி ஜீன்ஸ் அணிந்தபடி தனது செக்ஸியான வாழைத்தண்டு கால்களை காட்டியபடி அமலா பால் போட்ட அந்த பதிவுக்கு மட்டும் லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்தன.
மனம், உடல், காதல், காமம் என தத்துவமாக பேசி வரும் நடிகை அமலா பால், சிகரெட் பிடிக்கும் இலுஷன் புகைப்படத்தையும் வெளியிட்டு, ‘ எனது வாழ்க்கையை எனக்கு பிடித்த விதத்தில் வாழப் போகிறேன்’ என அறிவித்துபுதிய சர்ச்சையையும் கிளப்பி இருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்து பல பிரபலங்களும் வாயடைத்து போயினர் என்பது மட்டும் நிஜம்.
இந்நிலையில், கேரளாவின் கொச்சினில் வசித்து வரும் அமலா பால், லாக்டவுன் தளர்வு காரணமாக கடற்கரையில் ஆண் நண்பர் ஒருவருடன் கடலில் கட்டிப் புரண்டு, ஓடி ஆடி,விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
மேலும்,இப்பதிவில், உங்களின் சுதந்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.. உங்கள் உரிமையை கொண்டாடுங்கள் என சுதந்திர தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.












