ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இந்தியில் வெளியான ராஞ்சனா படத்தின் மூலம் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார், இப் படத்தில் நடிகை சோனம் கபூர்,அபய் தியோல், ( தர்மேந்திராவின் மகன்.) ஸ்வரா பாஸ்கர், உள்பட பலர் நடித்திருந்தனர்.
தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சாரா அலி கான் தனுஷின் ஜோடியாக நடிக்கிறார். அக்ஷய் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
ராஞ்சனா படத்தில் நடித்திருந்த அபய் தியோல் இப்போது அந்த படத்தைப்பற்றி ரசிகர் சொல்லியிருந்த கருத்தை வரவேற்று தடாலடியாக அவரது கருத்தை வரவேற்றிருக்கிறார்.”
“ராஞ்சனா படம் பிற்போக்குத்தனமான செய்தியை சொல்லுகிற படம். அந்த படத்தை நிச்சயம் ஏற்க முடியாது. காலம் காலமாக பாலிவுட்டில் இருக்கும் கதையை தான் இந்தப் படம் காட்டியிருக்கிறது.
ஒரு பெண் ஒப்புக்கொள்ளும் வரை அவளை ஆண் துரத்தலாம். துரத்திக் கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் மட்டும்தான் நடக்கும்.அவளும் ஆசைப்பட்டு செய்வாள். திரையில் கொண்டாடுவதுநல்லதா? பாலியல் வன்முறைகளுக்கு வழி வகுக்கும்” என்று ஏகத்துக்கும் விளாசியுள்ளார்.
ஏற்கனேவே நெபோட்டிசம் புயல் சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.,
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷின் ராஞ்சனா படம் குறித்து அபய் தியோல்விமர்சித்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது.