‘தேரோடும் வீதியிலே’ என்கிற தமிழ்ப்படம் வந்ததே ,பார்த்த ஞாபகம் இருக்கா?
அந்த படத்தின் கதாநாயகி பாயல் கோஷ் .கல்கத்தா பொண்ணு. தெலுங்கில் நடித்திருந்தாலும் முழுமையான ஈடுபாடு பாலிவுட்டுதான். பெரிய மார்க்கெட் என்பதால் எல்லா வட இந்திய நடிகைகளும் மும்பையை பிடித்துக்கொள்கிறார்கள்.அங்கு தேறாதவர்களுக்கு வேடந்தாங்கல் சரணாலயம் மாதிரி தமிழ்நாடு. இங்கேயும் உருப்படமுடியலியா ,ஓடு ஆந்திராவுக்கு .போடு கவர்ச்சிக் கடையை! எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம்.
இங்கே சொல்லப்போகிற சங்கதி வேற.!
சுஷாந்த் சிங் ராஜ்புட் மர்ம மரணத்துக்குப் பிறகு தற்போது பாலிவுட்டை சந்தி சிரிக்க வைத்திருப்பது போதை மருந்து விவகாரம்தான்.! போதை சாம்ராஜ்யத்தின் வேர் விட்டிருப்பது பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில்தான் என்பதை என்றைக்கு தலைவி பட நடிகை கங்கனா ரனாவத் சொன்னாரோ அன்று பிடித்தது ஏழரை .! இன்று அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு.
இவருக்கு அடுத்து போதை மருந்து நடிகர்களை அலற விட்டிருக்கிறார் நடிகை பாயல். !
“எனக்கு தெரியும்யா …எந்தெந்த ஹீரோ ஹெராயின் அடிக்கிறான்னு!” என்று பெரிய குண்டாக போட்டிருக்கிறார்.
“எல்லா ஹீரோக்களும் போதைக்கு அடிமைன்னு நான் சொல்ல மாட்டேன் ,சிலர் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்கிறார்கள்.ஆனால் பலர் போதை மருந்து எடுக்கிறார்கள்.மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டியவர்கள் இப்படி இருக்கலாமா?” என்று பாயல் வருத்தப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
மற்றொரு குண்டும் போட்டிருக்கிறார்.
ஒரு டைரக்டரால் பட்ட அவஸ்தைதான் அது.
“அவரால் பட்ட கஷ்டம் ஏராளம். சமைக்க சொல்வார். சாப்பிட்ட தட்டுகளை கழுவச் சொல்வார். சில நாட்கள் கழித்து அவரது வீட்டுக்குப் போனேன். இன்னொரு அறைக்கு கூட்டிச்சென்றார். அங்கு ஏராளமான சிடி கேசட்டுகள். என்னை உட்கார சொன்னார் .பேசிக்கொண்டே இருந்தவர் படக்கென ப்ளூ படத்தைப் போட்டு விட்டு பார்க்க சொன்னார். நான் சடக்கென எழுந்து போயிட்டு வரேன்னு சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியேறினேன்.
“இந்தா பாரு. இந்த ரூமுக்கு நிறைய ஹீரோயின்கள் வருவாங்க. நான் போன் செய்தா வந்து என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டுப் போவாங்க” என்றார்.
அந்தாளு சகவாசத்தை அன்னிக்கி விட்டேன்”” என்கிறார் பாயல். பெரிய அனுபவசாலிதான்.!