கொரானா கொள்ளை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் எப்படி இருக்கிறது?
“மிகவும் மோசமாக இருக்கிறது. கவலைக்கிடமாக இருக்கிறது!”
என்கிற இந்த செய்தி கிடைத்ததும் மக்கள் நீதிமய்யத்தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் உடனடியாக மருத்துவ மனைக்கு விரைந்து வந்தார். அங்கு எஸ்.பி.பி.யின் மகன் சரணிடம் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“எஸ்.பி.பி. நலமாக இருக்கிறார் என்று கூற முடியாது. உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது” என்றார்.