அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் தயாராகிவிட்ட நிலையில் அதை இயக்கிய பாலாவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் மிசண்டர்ஸ்டாண்டிங் .எதிர்பார்த்தவகையில் படம் வரவில்லை என்று தயாரிப்பாளர் எகிறினார்.
“எத்தனை வெற்றிப்படங்களைக் கொடுத்தவன் நான் ! எனக்கே இயக்கத்தைப்பற்றி கிளாஸ் எடுக்கிறியா ?”என்று பதிலுக்கு எகிறினார் பாலா.கதாநாயகன் துருவ் ,அப்பா விக்ரம் இருவரும் என்ன செய்வதென்று புரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
மகனின் முதல் படத்திலேயே பகை வருகிறதே கலங்கினார் சீயான் விக்ரம்.
பாலா இயக்கிய துருவ்வின் முதல் படம் முடக்கப்பட்டது.
இந்நிலையில் அப்படத்தயாரிப்பாளர் மீண்டும் அப்படத்தை கிரிசையா என்பவரது இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற பெயரில், படமாக்கி வெளியிட்டார். ரிலீஸானது. ஆனால் சரியான அடி !
முடக்கப்பட்ட இயக்குனர் பாலாவின் ‘வர்மா’ படத்தை தற்போது ‘ஓடிடி’ தளத்தில் வெளியிடும் முடிவில் இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகி வந்தது.
ஆனால்,இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில்,தற்போதுஇயக்குனர் பாலாவிடம் தயாரிப்பு நிறுவனம் சமரசம் செய்து கொண்டுள்ளது என்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ திரைப்படம் அக்டோபர் 6 ம் தேதி ஓடிடியில் வெளியாவதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் தமிழில் ‘ஆதித்திய வர்மா என்கிற பெயரில் வெளியானாலும், பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள வர்மாவுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.