மோசடி என்பது இந்தியாவின் தேசிய வியாதி மாதிரி ஆகிப்போச்சு !
சொத்து வாங்கிக்குவிப்பதில் சினிமாவைப் பொறுத்தவரை இந்த காலத்தில் சிரிப்பு நடிகர்கள்தான் பிழைக்கத் தெரிந்தவர்கள். எங்கெங்கு செழிப்பான நிலங்கள் இடங்கள் கண்ணுக்குத் தெரிகிறதோ, வளைத்துப் போட்டு விடுவார்கள்.சிலர் ஏமாந்து போவார்கள். உதாரணத்துக்கு வடிவேல் ,சூரி ஆகியோரை சொல்லலாம் ,
நடிகர் சிங்கமுத்து மீது மோசடி குற்றம் சாட்டியவர் வடிவேலு. சூரியை ஏமாற்றி மோசடி செய்ததாக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ,ரமேஷ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறார்.
. அதில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி, 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, ‘வீர தீர சூரன்’ படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தார். தயாரிப்பாளர் காவல் ஆணையாளர் உத்தரவை அடுத்து இந்த புகாரின் மீது அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ‘வீர தீர சூரன்’ படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர், நிலம் வாங்கி தருவதாகக் கூறி நடிகர் சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுவதை தொடர்ந்து இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.