
“எத்தனை நாளுதான் ஒரே கட்சியில குப்பையை கொட்டுறது. மாறணும்ல .குஷ்பூவே போயிட்டபிறகு நாம மட்டும் இந்த கட்சியைத் தூக்கி நிறுத்தப்போறமா, என்ன ?” என்று இன்னொரு தேசிய நடிகை பெட்டி படுக்கையை கட்டி விட்டார்.
விஜயசாந்தி.!
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய இவர் தனது பழைய வீட்டுக்கே குடி போகப்போகிறார். அதற்கான நாள் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இப்ப சந்தையில் மவுஸ் உள்ள கட்சி பிஜேபி. நிறைந்த மரியாதை ,சீர் செனத்தி கொடுத்து வரவேற்கிறபோது காங்கிரசில் இருந்து என்ன கிடைக்கப்போகிறது. அதனால் முன்னர் குடியிருந்த பிஜேபிக்கே திரும்புகிறார்.
ஒரு நிபந்தனை.!
தான் கட்சியில் மீண்டும் இணைகிறபோது அமித்ஷாவோ ,ஜேபி.நட்டாவோ முன்னிலை வகித்தால் நன்றாக இருக்கும் என்பது விஜயசாந்தியின் ஆசை.
நிறைவேறும். தெலங்கானா ஆளும் கட்சியை எதிர்க்கிற பிஜேபி இந்த வாய்ப்பினை தவற விட்டு விடுமா என்ன?












