சிலம்பரசன் நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது .
இப் படத்தை வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இடையே ஏற்பட்ட கருத்து மோதல் தான் காரணம் என்றும் சில சமூக வலைதளங்களின் மூலம் வதந்திகள் றெக்கை கட்டி பறந்தன,
, இதைப்பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில்,’எப்பா சாமி, ஏன் இப்படி? தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள். ‘மாநாடு’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா எங்களை வேலை செய்ய விடுங்கள்’ என அதிரடியாக டுவிட் ஒன்றை பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.