“சென்றிடுவீர் எட்டுத்திக்கும்.! கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ” என்று மீசைக்கவிஞன் பாடியதை சிலர் தவறுதலாக புரிந்து கொண்டு கடத்தல் வழியாக இங்கிருந்தும் அங்கிருந்துமாக சிலைகள் ,மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வந்தும் சேர்த்தும் தொழிலை வளர்த்துக்கொண்டனர்.
ஆனால் அது உண்மையான புரிதல் இல்லை என்பதை அடிக்கடி தண்டித்தல் வழியாக அரசு சொன்னது.
பாரதி பாடியதின் பொருளை சந்தானம் இப்படியும் புரிந்து கொண்டிருக்கிறார். தமிழ்ச்சினிமாவுக்கு புதிது இல்லை என்றாலும் ரினீவல் செய்திருப்பதாக நினைத்துக்கொள்ளலாம்.
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப் பிடிப்பு பெங்களூரில் தொடங்கிவிட்டது. .
ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்க்கும் . பெயரிடப்படாத இப்படத்தை ‘புரொடக்ஷன் No10’ ( சந்தானம்15 ) ஆக தயாரிக்கிறார்கள்.
பாக்யராஜ் , தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் இப்படத்தை கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார்.
இதில், சந்தானம் ஜோடியாக, ‘தாராள பிரபு’ ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார்.
மேலும், பாக்யராஜ், பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கதாநாயகனும், நாயகியும் வெவ்வேறு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். தொழில் முறை போட்டியில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடை பெறும் தொழில் முறை யுத்தத்தை முழு நீள நகைச்சுவை ‘சந்தானம்’ பாணியில் டைரக்டர் உருவாக்குகிறார்.இதுதான் சுருக்கம். !
சந்தானம் படங்களில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.