சாதிய மனப்பான்மையுடன் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
தேசம் முழுவதும் ஜெய் பீம் திரைப்படம் பரபரப்புடன் வரவேற்கப்பட்டது..அந்த படத்துக்குத்தான் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டுக்குப் போனார்கள் .நடிகர் சூர்யா,ஜோதிகா , ,படத்தின் இயக்குனர் த .செ .ஞானவேல் ஆகியோருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட்து. சைதையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்டார்.
நியாயம் கிடைத்து விட்டது.!
எதிர்மனு தாக்கல் செய்த படத் தயாரிப்பாளர் குழு .
மனுதாரர் புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டிகாட்டினர். வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதி சதிஷ் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதிஷ் குமார், நடிகர் சூர்யா மற்றும் ஞானவேலுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.