“நீதான்யா ஹீரோ வேஷம் கட்டுறே ” என்று சொல்லி கூட்டிக்கொண்டு போனவர்கள் ,மேடை ஏறியதும் “நீதான் பபூன் வேஷம் கட்றே “என்று கோமாளி தொப்பியை கொடுத்தால் அந்த ஆள் என்னாவான்?
செத்து சுண்ணாம்பாகி விடமாட்டானா ? இப்படியொரு அனுபவம் கருணாஸ்க்கு ஏற்பட்டிருக்கிறது.
கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கியவர் சரவணன் . இவர் சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் சசிகுமார் இடையில் வந்தவர் ,இவர்க்கு முன்னதாக நாயகனாக வேஷம் கட்டியவர் கருணாஸ் என்கிறார்கள் .அப்படியானால் எப்படி நடந்தது இந்த மாற்றம்?
கருணாஸை வைத்துச் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், ஒரு முக்கியவேடத்தில் சில நாட்கள் மட்டும் நடிக்கிற மாதிரி ஒரு வேடம் இருக்கிறது என்று சொல்லி சசிகுமாரை உள்ளே கொண்டுவந்தார்களாம்.
அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக சசிகுமாரின் வேடத்தைப் பெரிதுபடுத்தி அவரே கதாநாயகன் என்கிற மாதிரி ஆக்கிவிட்டார்கள் .அப்படியானால் கருணாஸின் நிலை.
“நீங்களும் ஒரு கேரக்டர் பண்ணலாம்” என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த கருணாஸ் விலகிவிட்டதாக சொல்கிறார்கள்.
இதே மாதிரிதான் “நீதான்யா ஹீரோ “என்று விடுதலை படத்தில் சூரிக்கு தலப்பா கட்டி விட்டார்கள்.ஆனால் அந்த படத்தின் நாயகனாக விஜயசேதுபதி பொறுப்பேற்றதும் சுண்ணாம்பு தடவாத வெற்றிலையை சாப்பிட்டவர் போலாகிவிட்டார் சூரி.படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தகுந்தது.
.












